மாக்சிம் கார்க்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"{{Infobox writer | image = Maxim Gorky LOC Restored edit1.jp..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:32, 17 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
மாக்சிம் கார்கி என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் .(உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в;[1] 28 மார்ச் [யூ.நா. 16 March] 1868 – 18 சூன் 1936) என்பவர் உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்..[2]
மாக்சிம் கார்க்கி | |
---|---|
Portrait of Gorky, c. 1906 | |
பிறப்பு | அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் March 28 [யூ.நா. March 16] 1868 உருசியா |
இறப்பு | மாசுகோ, உருசியா | சூன் 18, 1936 (வயது 68)
புனைபெயர் | மாக்சிம் கார்கி |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி |
தேசியம் | உருசியா |
வகை | புதினம், நாடகம் |
கையொப்பம் | |
இளமைக்காலம்
கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. தந்தை இறந்ததால் ஏற்பட்ட வறுமையால் தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவளித்தது அவரது பாட்டி அக்குலினா.
“என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அந்த இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதய வலிபற்றித் தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது.வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையில் இருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.
படங்கள்
-
Portrait of Gorky by Ilya Repin. Oil on canvas, 1899
-
Maxim Gorky (left) and Stepan Skitalets playing a gusli, 1900
-
Gorky with Feodor Chaliapin
-
c1900
-
c. 1900
-
Portrait by Akseli Gallen-Kallela, Helsinki, winter 1905-1906.
-
Portrait by Valentin Serov, 1905
-
7 February 1910
-
Portrait by N.A. Andreev, 1921
-
Genrikh Yagoda and Gorky (left)
-
Statue of Gorki in Art Muzeon Sculpture Park, Moscow
-
Commemorative coin, released in the USSR on his 120th anniv. features his portrait and a stormy petrel over a stormy sea
-
Maxim Gorky, Konstantin Piatnitsky and Stepan Skitalets, 1902
-
Gorky in the Penates by Repin, 1905
-
Portrait by Mikhail Nesterov, 1901
-
Portrait by Boris Grigoriev
உசாத்துணை
- ↑ His own pronunciation, according to his autobiography Detstvo (Childhood), was Пешко́в, but many reference books have Пе́шков.
- ↑ "Maksim Gorki". Kuusankoski City Library, Finland. பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.