செய்குத்தம்பி பாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"'''செய்கு தம்பி பாவலர்''' ({{lan..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''செய்கு தம்பி பாவலர்''' ({{lang-en|[[Sheikh Thambi Pavalar]]}}) (1874–1950) 1874 ம் ஆண்டு சூலை திங்கள் 31 ம் நாள் பக்கீர் மீரான் ஆமினா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக [[இடலாக்குடி]] எனும் ஊரில் பிறந்தார்.தமிழ்ப் பெரும்புலவர், வடலூர் வள்ளலாரின் அருட்பாவை மருட்பாவென்று மறுத்தோரை எதிர்த்து "அருட்பா அருட்பாவே" என்று நிலை நாட்டியவர். சிறாப் புராணத்திற்குச் சிறந்ததோர் உறையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத் தமிழ், அழகப்பக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்த மதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் "[[சதாவதானம்]]" என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்
[[படிமம்:Sadavadhani.jpg|thumb|''சதாவதானி'' செய்குத்தம்பி பாவலர்]]
'''''சதாவதானி'' செய்குத்தம்பி பாவலர்'''([[ஜூலை 31]], [[1874]] - [[பெப்ரவரி 13]], [[1950]]) தமிழ்ப் பெரும் புலவர். [[சீறாப் புராணம்|சீறாப்புராணத்திற்குச்]] சிறந்தோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் ‘'சதாவதானம்' என்னு கலையில் சிறந்து விளங்கியவர்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
நாஞ்சில் நாட்டு [[கோட்டாறு]] பகுதியில் [[இடலாக்குடி]]யில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31இல் பிறந்தார்.
 
1950ம் ஆண்டு சூலை பெப்ரவரி 13 ம் நாள் காலமானார்.<ref>[http://pavalar.blog.com/2009/05/02/the-freedom-fighter-who-declined-the-thyagi-pension/ Pavalar-freedom fighter]</ref>
அக்காலத்தில் [[திருவிதாங்கூர்]] மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பி இம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது.
 
31 திசம்பர் 2008 அன்று நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.<ref>[http://www.indiapost.gov.in/stamps2008.html India post-stamps 2008]</ref>
எனினும் இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது. இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.
 
== மேற்கோள்கள்==
ஞானியார் அப்பாவின் ' மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு ' என்னும் நூலை அச்சிட சென்னை 'இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்கு ' தமிழறிந்த இஸ்லாமியர் தேவைப்பட்டார். சென்னை சென்று அந்நூலைச் சிறப்புடன் பதிப்பித்த செய்குதம்பிக்கு அப்போது வயது 21, அவரது அறிவாற்றலைக் கண்டு ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்திலேயே பிழை திருத்தும் புலவராக அவரை அமர்த்திக் கொண்டனர். மாதம் ரூ60/-ஊதியமும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர். அவர் வறுமையை மறந்து வாழத் தொடங்கிய காலம் இதுவே.
{{Reflist}}
இக் காலத்தில்தான் சிந்தையள்ளும் சிறந்த காப்பியமாகிய சீறாப்புராணத்துக்கு சீரிய உரையெழுதிப்பதிப்பித்தார். வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு, தேவலோகத்துக் கிரிமினல் கேசு என்னும் நூல்களும்எழுதிப் பதிப்பித்தார். இதனால் இவர் புகழ் நாடெங்கும் பரவியது. உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி [[திருக்குறள்]], [[கம்பராமாயணம்]], [[சீறாப்புராணம்]] பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும், நிகழ்த்தினார்.
 
== வெளி இணைப்புகள் ==
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் [[1907]]-ஆம் ஆண்டு [[மார்ச் 10]] ஆம் தேதி [[சென்னை]]யில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று ''சதாவதானி'' செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் [[நபி]]கள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை காவியங்களையும் எழுதியவர்.
*[http://pavalar.blog.com/2009/11/12/pavalar-ananda-vikatan/ Pavalar-in Tamil]
 
* [http://www.koodal.com/article/tamil/author.asp?id=69&title=sheikh-thambi-pavalar செய்கு தம்பிப்Koodal-Seikh பாவலர்]thambi Pavalar-in கூடல்Tamil]
ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920 நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையிலேயேநடந்தன.
 
"1937ஆம் ஆண்டில் பாவலர் [[நாகர்கோயில்]] நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்"என்று [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக]] துணைவேந்தராக இருந்த டாக்டர்வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.
 
பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர். [[நாகர்கோயில்]] பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும்இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின்காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர்.
 
1950 பிப்ரவரி 13-ல் அவர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு [[தேசிக விநாயகம் பிள்ளை|கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை]] தலைமை
தாங்கினார்
"ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பி
பாவலனை
எந்நாள் காண்போம் இனி"
 
என்று வருந்திப் பாடினார்.
 
பாவலரின் அரிய தொண்டினை அரசும், மக்களும் மறக்க இயலாது. பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது. பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு 'பாவலர் தெரு'என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு ' சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.<ref>தினமணி நாள்:சனிக்கிழமை/31-7-1999
</ref>
 
==நினைவு மண்டபம்==
[[தமிழ்நாடு அரசு]] செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு [[கன்னியாகுமரி மாவட்டம்]] [[நாகர்கோவில்]] கோட்டார் பகுதியில் இடலாக்குடியில் [http://www.tn.gov.in/tamiltngov/memorial/seigu.htm சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம்] அமைத்துள்ளது. இங்கு 900 சதுர அடி பரப்பளவில் 125 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நூல் நிலையமும், படிப்பகமும் செயல்பட்டு வருகின்றன.
 
== ஆதாரம் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilvu.org/courses/degree/p202/p2024/html/p20246l2.htm செய்கு தம்பிப் பாவலர்] - இ.த.ப
* [http://www.koodal.com/article/tamil/author.asp?id=69&title=sheikh-thambi-pavalar செய்கு தம்பிப் பாவலர்] - கூடல்
* [http://forum.vallalar.org/index.php?topic=102.msg215;topicseen#msg215 சமயம் கடந்த சதாவதானி]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:1874 பிறப்புகள்]]
[[பகுப்பு:1950 இறப்புகள்]]
[[பகுப்பு:இசுலாமியத் தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செய்குத்தம்பி_பாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது