[[File:Portrait of Percy Bysshe Shelley by Curran, 1819.jpg|right|thumb|225px|ஷெல்லி]]
ஓசிமாண்டியாஸ் சொல்லும் நீதி - எவ்வளவு பெரிய பேரரசாயினும் ஒரு நாள் அழிந்து போவான்போகும்; பலம் வாய்ந்த சர்வாதிகாரிகள் ஒரு நாள் உலக நினைவிலிருந்து மறைந்து போவர் என்பதே. இக்கருத்தினை ஷெல்லி அற்புதமான காட்சியமைப்பின் மூலமும் உரத்து படிக்க ஏற்ற மொழிநடையில் வெளிக் கொணர்ந்துள்ளார். இக்கவிதையின் வரிகள் பல புத்தகங்கள், [[புனைகதை]]கள், [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]], செய்தித்தாள் பத்திகள் போன்ற வெகுஜன இலக்கியப் படைப்புகளில் பயனபடுத்தப்பட்டுள்ளன.<ref>{{cite book |title=Shelley's Poetry and Prose |last=Reiman |first=Donald H |authorlink= |coauthors=Powers, Sharon.B |year=1977 |publisher=Norton |location= |isbn=ISBN 0-393-09164-3 |pages= |url= }}</ref> ஓசிமாண்டியாஸ் என்னும் பெயர் பல புனைவுப் படைப்புகளில், ஆணவம் அல்லது இறுமாப்பினால் அழிந்து போகும் பாத்திரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. வெளியாகி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், பல கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. ஷெல்லியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக இக்கவிதை கருதப்படுகிறது.