சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
டெம்பிள் ஊதியம் (''Temple Wage'') என்றழைக்கப் பட்ட நிவாரணத் திட்டத்தில், வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் ஒரு அணா (1/16 ரூபாய்) வும் 450 கிராம் தானியமும் வழங்கப்பட்டன.<ref name=hall-mathews2008-5>{{Harvnb|Hall-Matthews|2008|p=5}}</ref><ref>{{Harvnb|Washbrook|1994|p=145}}</ref><ref name="igi-III-489">{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|p=489}}</ref> அதற்காக நாள் முழுவதும் அவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.<ref name = hall-matthews-1996-219>{{Harvnb|Hall-Matthews|1996|p=219}}</ref> நிவாரணம் பெறுபவர்களிடம் கடுமையான வேலை வாங்காவிட்டால் மக்கள் சோம்பேறிகளாகி மேலும் பலர் நிவாரணம் கோருவர் என்று டெம்பிளும், மற்ற சந்தை பொருளாதார நிபுணர்களும் கருதியதே இதற்கு காரணம்.<ref name=hall-mathews2008-5/> இந்திய வைஸ்ராய் லிட்டன் பிரபு அவர்களுக்கு முழு ஆதரவளித்தார். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[புளோரன்ஸ் நைட்டிங்கேல்|ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்]] போன்ற மனிதாபிமானிகள் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] போர் நடந்து கொண்டிருந்ததால், நிவாரண நிதி ஒதுக்கீட்டை உயர்த்த லிட்டன் மறுத்து விட்டார். மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுவதை எதிர்த்து நிவாரணத் தொழிலாளர்கள் [[மும்பை|பம்பாயில்]] போராட்டம் நடத்தினர்.<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|pp=477–483}}</ref>
சென்னையில் சுகாதாரத் துறை ஆணையராக இருந்த டபிள்யூ. ஆர். கார்நிஷ் என்ற மருத்துவரின் பெருமுயற்சியால்<ref name=arnold-1994-7-8>{{Harvnb|Arnold|1994|pp=7-8}}</ref> மார்ச் 1877 இல் அரசாங்கம், தின நிவாரணத்தை உயர்த்த ஒப்புக் கொண்டது.<ref name=arnold-1994-7-8/> 570 கிராம் தானியமும் 53 கிராம் [[பயறு|பயறுவகைகளும்]] ([[புரதம்|புரதச் சத்துக்காக]]) வழங்கப் பட்டன.<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|p=489}}</ref> ஆனால் அதற்குள் பல லட்சம் பேர் பட்டினியால் மாண்டிருந்தனர். சென்னை மாகாணத்தில் மட்டுமன்றி [[மைசூர்]], [[ஹைதராபாத்]] ஆகிய சமஸ்தானங்களையும், பம்பாய், ஐக்கிய மாகாணங்களையும் பஞ்சம் தாக்கியது. 1878 இல் பருவமழை திரும்பினாலும், பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை [[மலேரியா]] தாக்கியது; மேலும் பல லட்சம் பேர் மாண்டனர்.<ref name=igi-III-489/> இரு ஆண்டுகளில் மொத்தம் சுமார் ஒன்பது கோடி ரூபாய் நிவாரணத்திற்காக செலவிடப்பட்டது. பஞ்சம் தாக்கிய பகுதிகளுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டன. மேலும் ஆங்கில
== விளைவுகள் ==
|