மிருதங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
''தண்ணுமை ''(மிருதங்கம்) [[தென்னிந்தியா]]வில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான [[கருநாடக இசை]] நிகழ்ச்சிகளில், சிறப்பாக [[வாய்ப்பாட்டு]] நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு [[இசைக்கருவி]] எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீக]] காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
 
'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' எனும்என்னும் வடமொழிச் சொல் எனும்எனக் கருத்து உள்ளதுகருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.<ref>'பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்' - கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய கட்டுரையின் 75 ஆம் பகுதி. தினமணி கதிர், 22.01.2012</ref>
 
பெரும்பாலும் [[பலா]]மரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய [[விட்டம்|விட்ட]]முள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் [[தோல்|தோலினால்]] மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மிருதங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது