ஏவிஎம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|ஏவிஎம் திரைப்படத் தயாரிப்பாளர்கள்}}
No edit summary
வரிசை 36:
 
'''''ஏவிஎம்''''' (''AVM'') என்பது [[இந்தியா]]வின் பழைய மற்றும் பெரிய திரைப்பட உருவாக்க ஒளிப்பட நிலையம் ஆகும். இந்த நிலையம் தற்போது எம்.சரவணனாலும் அவரது மகனான எம்.எசு.குகனாலும் நடாத்தப்படுகின்றது. இந்த நிறுவனம் முதலில் தயாரித்த [[திரைப்படம்]] [[நாம் இருவர்]] ஆகும். இந்த நிறுவனம் [[சென்னை]]யில் [[வடபழநி]] எனும் இடத்தில் அமைந்துள்ளது.<ref>[http://www.avm.in/about.html ஏ.வி.எம். பற்றி {{ஆ}}]</ref> தமிழ், தெலுங்கு, பொலிவூட் திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]] போன்ற பிரபல நடிகர்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
==தொடக்க வரலாறு==
தென்னிந்தியாவின் திரைப்படத்துறை சிற்பிகளில், திரு ஏவி.மெய்யப்பன் அவர்களை ஒரு தொலைநோக்குடன் கூடிய தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர், சினிமா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் எனலாம். இந்தியாவில் திரைப்படம் 1931 ஆம் ஆண்டு அறிமுகமான போதே திரையுலகில் நுழைந்து, தம் ஐம்பதாண்டு காலம் இடைவிடாமல் உழைத்து பல்வேறுபட்ட திரைப்படங்களை பல மொழிகளில் இவர் உருவாக்கினார். தொலைநோக்குப் பார்வையுடைய இந்த மனிதர், அவருடைய தொழிலில் நிறைய சோதனைகளைச் சந்தித்தாலும், ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, அயராது உழைத்து சிகரத்தைத் தொட்டவர். திறமையை கண்டறிந்து மெச்சும் வல்லமை கொண்ட இவர், திரைப்பட வாய்ப்புகளையும் வெற்றிகளையும் நடிகர்களுக்கும் கலை வல்லுநர்களுக்கும் வழங்கினார்
 
தமிழ்நாட்டில், [[காரைக்குடி|காரைக்குடியில்]] ஏவி அண்ட சான்ஸ் என்ற பெயரில் சிறு அங்காடியை நடத்தி வந்த அவிச்சி செட்டியார்|செட்டியாருக்கு 28 ஜூலை 1907 அன்று மகனாகப் பிறந்த அவிச்சி மெய்யப்பன் நாட்டுக்கோட்டை [[நகரத்தார்]] குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அந்த அங்காடியில் இசைத்தட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. பருவ வயதிலேயே தன் தந்தையின் வணிகத்தில் இணைந்த மெய்யப்பன், இசைத்தட்டுக்களை சந்தைப் படுத்துவதைவிட அவற்றை தயாரிப்பது இலாபமானது என்று கருதி தயாரிக்க முடிவெடுத்தார். அவருடைய நண்பர்களான திரு.கே.எஸ்.நாராயண அய்யங்கார், சுப்பையா செட்டியார் மற்றும் சிலருடன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி வளர்த்தார். அவருக்கு திரு.கே.பி.வரதாச்சாரி (சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிர்வாகி) மற்றும் தூத்துக்குடி ராகவாச்சாரி கோவிந்தாச்சாரி ஆகியோர் மூலம் கிடைத்த சிறப்பான உதவியால் பல இசைத்தட்டுக்களை படைத்தார்.
==முதல் முயற்ச்சி==
பேசும்பட யுகம் (1931) மலர்ந்த போது மெய்யப்பன் அதன்பால் ஈடுபாடு கொண்டு சரஸ்வதி ஒலி தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி திரைப்படத் தயாரிப்பில் தன் கன்னி முயற்சியை அல்லி அர்ஜுனா என்ற இந்து புராணப்படம் மூலம் தொடங்கினார். அல்லி அர்ஜுனா கல்கொத்தாவில் எடுக்கப்பட்டு வெளியான போது பெரும் தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து எடுக்கப்பட்ட படம் ரத்னாவளி என்று பெயரிடப்பட்டது. இந்த நேரத்தில், திரு.ஏ.டி.கிருஷ்ணசாமி என்ற பட்டதாரி கலைப்பிரியர் (நடிகர்) ஒரு உதவி இயக்குனராக இந்தக் குழுவில் இணைந்தார். திரு.மெய்யப்பனுடன் 10 ஆண்டுகள் இணைந்த இவர் ஏவிஎம் இன் தொடக்ககாலப் படங்களில் வசனம் மற்றும் இயக்குனர் பணிகளை மேற்கொண்டார்.
 
தோல்விகள் மெய்யப்பனை சிறிது காலம் தளரச் செய்தன. பெங்களூருவைச் சேர்ந்த திரை அரங்கின் உரிமையாளர் திரு.ஜெயந்திலால் என்பவருடன் இணைந்து பிரகதி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதிர்ஷ்ட தேவதை இவர் வழியில் வந்தாள். ஏவிஎம் நந்தகுமார் என்ற மராத்திப் படத்தைத் தமிழில் பிரகதி தயாரிப்பில் எடுத்தார். இந்தப் படத்தின் மூலம் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அறிமுகமானது ஒரு சிறப்பு.
 
இந்தப் படத்தின் மூலம் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அறிமுகமானது ஒரு சிறப்பு.
 
இந்தப் படத்தின் மூலம் முதலில் பின்னணி பாடல் பாடுவது முயற்சிக்கப்பட்டு, திருமதி. லலிதா வெங்கட்ராமன் என்ற பெண் கதாநாயகி தேவகிக்காகப் பாடியது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம். சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடில்) இருந்த க்ளப் ஹவுஸ்ஸில் படமாக்கப்பட்டது. இது ஒரு முதல் வெளிப்புறப் படபிடிப்பு எனவே ஸ்டுடியோ செட் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த படப்பிடிப்பு சென்னை அடையாரில் அட்மிரால்டி ஹவுசில் நடந்தது.
===வெற்றி===
திரு.மெய்யப்பன் அவர்கள் 1940 ஆண்டு தயாரித்த பூகைலாஸ் (1940 படம்) என்ற புராணப்படம் வரலாற்றுச் சாதனை படைத்தது. தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை மும்பையில் பயிற்சி பெற்ற சுந்தர் லால் நட்கர்னி என்ற மங்களூர்காரர் இயக்கினார். இப்படம் ஒரு இமாலய வெற்றிப்படம் ஆனது. திரு மெய்யப்பன் அவர்கள் 1941 இல் முட்டைக்கண்ணரான திரு. டி.ஆர்.இராமச்சந்திரன், காளி என் இரத்தினம் மற்றும் சாரங்கபாணி கூட்டணியில் தயாரிக்கப்பட்ட சபாபதி என்ற நகைச்சுவைப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து வந்த வெற்றிப் படங்கள்: என் மனைவி, அரிச்சந்திரா (1943), ஸ்ரீ வள்ளி என்பன.
 
எங்கோ நடந்த இரண்டாம் உலகப்போர் சென்னையில் மிகுந்த சிரமமாக உணரப்பட்டது; மேலும் ஜப்பானியரின் அணுகுண்டு மிரட்டல் சென்னையை கலக்கியது. திரு.மெய்யப்பன் தன்னுடைய நிறுவனத்தை காரைக்குடி நகருக்கு வெளியே உள்ள ஒரு நாடகக் கொட்டகைக்கு மாற்றினார். வாடகைக்கு எடுக்கப்பட்ட திறந்தவெளி மைதானம் ஒரு ஸ்டுடியோவாக உருவெடுத்தது. இதற்கு ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோ என்ற பெயரில் உருவானது.
 
நாம் இருவர் (1947), அந்த நாள் (1954) என்ற வெற்றிப் படங்களும் ஹம பாஞ்சி எக் தால் கே என்ற தேசிய விருது பெற்ற படமும் தயாரிக்கப்பட்டன.
 
திரு.மெய்யப்பன் அவர்கள் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் மறைந்தார். அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய மகன்கள் நிர்வாகத்தை ஏற்றனர். ஏவிஎம்மின் சகாப்தம் தொடர்கிறது<ref>http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2006072802680100.htm&date=2006/07/28/&prd=fr&</ref>
== திரைப்படங்கள் சில ==
{{translate}}
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
"https://ta.wikipedia.org/wiki/ஏவிஎம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது