அத்துசா (Hattusa) பிந்திய வெண்கலக் காலத்தில் இட்டைட்டுப் பேரரசின் தலைநகரமாக இருந்தது. கிசிலிர்மார்க் ஆற்றின் பெரு வளைவுக்குள் அடங்கிய துருக்கியின் தற்கால போகசுக்காலேக்கு அருகில் இப்பழைய நகரின் அழிபாடுகள் காணப்படுகின்றன. 1986ல் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் அத்துசா சேர்க்கப்பட்டது.

அத்துசா
தென்மேற்கில் உள்ள சிங்க வாயில்
அத்துசா is located in துருக்கி
அத்துசா
Shown within துருக்கி
இருப்பிடம்போகாசுக்காலே, துருக்கி
பகுதிஅனத்தோலியா
ஆயத்தொலைகள்40°01′11″N 34°36′55″E / 40.01972°N 34.61528°E / 40.01972; 34.61528
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 6வது ஆயிரவாண்டு
பயனற்றுப்போனதுகிமு 1200
காலம்வெண்கலக் காலம்
கலாச்சாரம்இட்டைட்டு
பகுதிக் குறிப்புகள்
நிலைஅழிபாடு
அதிகாரபூர்வ பெயர்: அத்துசா: பாரம்பரியத் தலைநகர்
வகைபண்பாடு
அளவுகோல்i, ii, iii, iv
வரையறுப்பு1986 (10வது அமர்வு)
சுட்டெண்377
அரச தரப்புதுருக்கி
பிரதேசம்ஐரோப்பாவும் வட அமெரிக்காவும்

வரலாறு தொகு

கிமு 2000க்கு முன்னர், தாயக மக்களாகத் தெரியும் ஆத்தி மக்கள் அத்துசு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு குடியிருப்பை அமைத்திருந்தனர். இப்பகுதியில் இதற்கு முன்னரும் குடியிருப்புக்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஆத்தியர்கள் தமது முதல் குடியிருப்பை பியூயூக்கலேயின் உயரமான முகடுகளில் அமைத்திருந்தனர்.[1] இப்பகுதியில் குடியிருப்புக்கள் இருந்ததற்கான தடயங்கள் கிமு ஆறாவது ஆயிரவாண்டில் இருந்து கிடைக்கின்றன. கிமு 19ம், 18ம் நூற்றாண்டுகளில், அசிரியாவில் இருந்த அசூரில் இருந்து வந்த வணிகர்கள் தமது வணிக நிலை ஒன்றை இங்கே அமைத்திருந்தனர். இது நகரத்தில், அவர்களுக்குரிய தனியான பகுதியில் அமைந்திருந்தது.

குறிப்புகள் தொகு

  1. "The Excavations at Hattusha: "A Brief History"". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2015-03-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்துசா&oldid=3792485" இலிருந்து மீள்விக்கப்பட்டது