அனார்க்கலி

பழங்கால 16ஆம் நூற்றாண்டு முகலாய அவையின் அடிமைப் பெண்

அனார்க்கலி (பொருள்: மாதுளம்பூ) நாதிரா பேகம் அல்லது சர்புன்னிசா என்ற இயற்பெயருடைய ஒரு அடிமைப் பெண் என்றும் இப்பெண் ஈரானில் பிறந்து பின்னர் லாகூருக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது[1].

ஜகாங்கீரும் அனார்க்கலியும்.
அப்துர் ரகுமான் சுக்தாய் என்பவரது அனார்க்கலி ஓவியம் .

இப்பெண் முகலாயப் பேரரசர் அக்பரின் மகனான சலீமைக் காதலித்ததாகவும் இதனால் இவர் உயிரோடு புதைக்கப்பட்டதாகவும் கதைகளில் கூறப்படுகிறது. இவர்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு முகல்-இ-அசாம் என்னும் புகழ்பெற்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Legend: Anarkali: myth, mystery and history". பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனார்க்கலி&oldid=3589216" இலிருந்து மீள்விக்கப்பட்டது