அப்தின் பே அல்-அர்னாட் (Abdin Bey al-Arnaut) (சி. 1780-1827) எகிப்தின் சுல்தான் முகமது அலியின் ஆட்சியின் ஆரம்ப காலத்தின் அல்பேனியத் தளபதியும் எகிப்தின் அரசியல்வாதியுமாவார். முகம்மது அலியின் தளபதிகளின் முக்கிய குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு, கெய்ரோவில் இவர் வசித்த இடத்தில் இவரது பெயரில் அப்தீன் அரண்மனை கட்டப்பட்டது. மேலும், மரியாதை நிமித்தமாக நகரத்தின் ஒரு மாவட்டத்திற்கு மறுபெயரிடப்பட்டது.

அப்தீன் பே ஆளுநராக இருந்த தோங்கோலா மாகணத்தின் வரைபடம்

வாழ்க்கை தொகு

1814 இல் இவர் வகாபி இயக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை வழிநடத்தினார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். [1] ஒரு வருடம் கழித்து இவர் முகம்மது அலிக்கு எதிரான ஒரு படுகொலை சதியில் ஈடுபட்டதாகக் கருதி எச்சரிக்கப்பட்டார். இந்தச் சதியிலிருந்து அலி தப்பித்தார். 1820 ஆம் ஆண்டு வரை, சூடான் முற்றுகையில் இவர் இரண்டாவது தளபதியாக நியமிக்கப்பட்டபோது, அல்-மினியாவின் ஆளுநராக இருந்தார். முற்றுகையின் போது, இவர் அல்-குர்தி போரில் தன்னை வேறுபடுத்திக் கொண்டார்.

ஏப்ரல் 1821 இல் இவர் தோங்கோலா மாகாணத்தின் முதல் ஆளுநரானார் (கிழக்கு கிழக்கு சமாலியா ). இவரது மாளிகையை கிறிஸ்டியன் கோட்ஃபிரைட் எஹ்ரென்பெர்க் என்பவர் வடிவமைத்தார். கடந்து செல்லும் துருப்புக்களுக்கான தங்குமிடங்களை உருவாக்குதல் மற்றும் பிராந்தியத்தின் வரி மதிப்பீடு ஆகியவை இவரது முக்கிய கடமைகளில் அடங்கும். இவரது வரிவிதிப்பு முறை நியாயமானதாகக் கருதப்பட்டது, மேலும் இது மாகாணத்தில் கிளர்ச்சி அபாயத்தைக் குறைக்க பங்களித்தது. இருப்பினும், சூடானிலிருந்து எகிப்துக்கு கறுப்பின ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு செல்வதற்காக கப்பல் கட்டும் திட்டம் தோல்வியடைந்தது. 1820 களில் புதிதாக கையகப்படுத்தப்பட்ட எகிப்தின் அனைத்து பிராந்தியங்களிலும் கிளர்ச்சிகள் அடிக்கடி நடந்துகொண்டிருந்ததால், அப்தீன் பே ஆட்சியின் போது தோங்கோலாவின் அரசியல் நிலைத்தன்மை அசாதாரணமானது என்று கருதப்படுகிறது. [2] 1825 க்குப் பிறகு இவர் எகிப்துக்குத் திரும்பினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு கலகத்தின் போது கொல்லப்பட்டார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தீன்_பே&oldid=3532068" இலிருந்து மீள்விக்கப்பட்டது