அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம்

அஹம் பிரம்மாஸ்மி (Aham Brahmasmi) (சமசுகிருதம்:अयम् आत्मा ब्रह्म) என்பது `நான் பரம்பொருளாக இருக்கிறேன்` என்று பொருள்படும் மகாவாக்கியம் ஆகும் (பிரகதாரண்யக உபநிடதம் (1.4.10). அத்வைத மரபில் தத்துவமசி என்ற மகாவாக்கியம் உபதேச வாக்கியம் என்றும், `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியம் அனுபவ வாக்கியம் என்றும் அத்வைத வேதாந்திகள் கூறுகின்றனர்.

இங்கும் அஹம் என்பது சீவ சைதன்னியத்தையும், பிரம்மம் என்பது பிரம்ம சைதன்னியத்தையும் குறிப்பிடுவதால் அவைகளின் ஒருமையை பாகலட்சணையின் மூலம் விசாரணை செய்து தத்துவமசி என்ற மகாவாக்கியத்தின் விசயத்தில் விவரித்து இருப்பதை போன்றே `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியத்தின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும். துறவற வாழ்வை மேற்கொள்ளும் துறவிகளுக்கு மகா வாக்கியங்களின் கருத்து விரிவாக விளக்கப்படுகிறது.

பிற மகா வாக்கியங்கள் தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு