ஆந்திர இசுவாகு மரபினர்

ஆந்திர அரச மரபினர்

ஆந்திர இசுவாகுகள் (சமசுகிரதம் इक्ष्वाकु, தெலுங்கு ఇక్ష్వాకులు) என்பவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பழமையான அரச மரபுகளில் ஒன்றாகும். இவர்கள் ஆந்திரத்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் குண்டூர் -கிருஷ்ணா-நலகொண்டா வட்டாரத்தில் ஆட்சி செலுத்தியவர்கள். இவர்கள் தெலுங்குப் பகுதிகளை கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகளை கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆண்டனர்.[1] இவர்களின் தலைநகராக நாகார்ஜுனகொண்டா இருந்தது. இந்த இச்சுவாகு மரபினர் மேற்கு சத்ரபதிகளுடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர். இந்த ஆந்திர உள்ளூர் இச்சுவாகுவினர் அந்த புராண இச்சசுவாகு மரபினரின் பெயரை பட்டமாக ஏற்றிருக்கக்கூடும்.[2]

தொல்லியல் சான்றுகளின்படி ஆந்திர இச்சுவாகு மரபினர் கிருஷ்ணா ஆற்று வடிநிலப்பகுதியில் சாதவாகனர்களை வெற்றி கொண்டதாக அறியப்படுகிறது. இச்சுவாகு மரபினரின் கல்வெட்டுகள் நாகார்ஜுனகொண்டா, ஜக்கையாபேட்டை, அமராவதி, பட்டிபிரோலு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  • The Andhras Through the Ages by Kandavalli Balendu Sekharam

குறிப்புகள் தொகு

  1. Andhra Ikshvaku inscriptions
  2. Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India , pp 212
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_இசுவாகு_மரபினர்&oldid=3033751" இலிருந்து மீள்விக்கப்பட்டது