ஆனந்து மாவட்டம்

ஆனந்த் மாவட்டம், (Anand district) இந்திய மாநிலமாகிய குஜராத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் ஆனந்த் நகரம் ஆகும். இங்கு இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.[1] இதன் பரப்பளவு 4,690 சதுர கி.மீ. இங்கு வாழும் மக்கள் குஜராத்தி மொழியில் பேசுகின்றனர். இவர்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விட அதிகம். அமுல் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் கூட்டுறவு இணையம் இங்கு செயல்படுகிறது. இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற அமுல் பால் பண்ணை உள்ளது.

வட்டங்கள் தொகு

இது எட்டு வட்டங்களைக் கொண்டது.

  • ஆனந்து
  • ஆங்கலாவா
  • உமரேட்
  • கம்பாத்
  • தாராபுர்
  • பேடலாத்
  • போரசத்
  • சோஜித்ரா

சுற்றுலா தொகு

  • அமுல் பால் பண்ணை
  • ஆனந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  • கம்பாத் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

புகழ் பெற்றவர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "ஆனந்த் மாவட்ட இணையதளம்". Archived from the original on 2020-06-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்து_மாவட்டம்&oldid=3543233" இலிருந்து மீள்விக்கப்பட்டது