ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி

ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி (R.V.S. Peri Sastri), இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தார். இவர் இப்பதவியில் ஜனவரி 1, 1986 முதல் 1990 நவம்பர் 25 வரை பணியாற்றினார். 1989இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்கள் இவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.

ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி
R.V.S. Peri Sastri
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
1 ஜனவரி 1986 – 25 நவம்பர் 1990
முன்னையவர்ஆர். கே. திரிவேதி
பின்னவர்வி. எஸ். ரமாதேவி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியன்

கல்வி தொகு

பிப்ரவரி 1, 1929 அன்று ஆந்திராவின் பீமிலிபட்னத்தில் பிறந்த பெரி சாஸ்திரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியானது சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு, தில்லி பல்கலைக்கழக சட்ட பீடத்தில் பி.சி.எல் பட்டம் பெறுவதற்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூர், ஆந்திரா மற்றும் ராய்ப்பூரில் சில காலம் கற்பித்தார். டெல்லியில் பி.சி.எல் மற்றும் எல்.எல்.எம். முடித்த அவர் முடித்த பல்கலைக்கழகத்திலும் கற்பித்தார்.

நீதித்துறை பணி தொகு

1956-57ஆம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையத்தில் இளைய சட்ட அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர் இந்திய அரசாங்கத்தின் சட்ட அமைச்சகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். 1978இல் இந்திய அரசின் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். பெரி சாஸ்திரி பல ஆண்டுகளாக இந்திய அரசின் முதன்மை சட்டமன்ற வரைவாளராக இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பில் பல திருத்தங்களையும், 1950ஆம் ஆண்டின் இந்தியச் சாலை போக்குவரத்துக் கழகச் சட்டம், [1] சர்க்கரை மேம்பாட்டு நிதிச் சட்டம், 1982 மற்றும் தில்லி விற்பனை வரிச் சட்டம், 1975 உள்ளிட்ட பல சகாப்த மசோதாக்களையும் வரைந்தார்.

தேர்தல் ஆணையர் பணி தொகு

பெரி சாஸ்திரி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில், 1989 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிப்பதன் மூலம் ஆணையத்தைப் பல உறுப்பினர்கள் கொண்டதாக மாற்ற முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சியானது பெரி சாஸ்திரியின் அதிகாரத்தினை குறைப்பதற்காகவும், அரசின் வேண்டுகோளை நிராகரித்து நேர்மையான அதிகாரி எனப்பெயர் பெற்றதற்கான சோதனை என முன்னாள் கம்ப்ரோலர் மற்றும் பொது தணிக்கையாளர் சி.ஜி.சோமையா விமர்சித்தார். வி. பி. சிங் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த தினேசு கோசுவாமியிடம் சில தேர்தல் சீர்திருத்தங்களை பெரி சாஸ்திரி பரிந்துரைத்திருந்தார். சாஸ்திரி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான முதல் நடவடிக்கைகள் இவரது பதவிக் காலத்தில் தான் எடுக்கப்பட்டன.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
ஆர். கே. திரிவேதி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
01 சனவரி 1986 – 25 நவம்பர் 1990
பின்னர்
வி. எஸ். ரமாதேவி