இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு

இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு என்பது 8- ம் நூற்றாண்டு தொடக்கம் இந்தியா மீது பல்வேறு இசுலாமிய அரசுகள் மேற்கொண்ட படையெடுப்புகளையும், அதன் பின்னர் அவர்களுடையை ஆட்சியையும் குறிக்கிறது. பல நூற்றாண்டுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் இசுலாமிய அரசர்களின் ஆட்சியில் இருந்தன. ஒரு காலப் பகுதியில் தெற்காசிய நிலப்பரப்பு முழுவது முகலாயப் பேரரசின் ஆட்சியில் இருந்தது.