இந்திய பஞ்சாப் அரசு

பாக்கிஸ்தானிலுள்ள பஞ்சாப் அரசைப் பற்றி அறிய, பாக்கிஸ்தான் பஞ்சாப் அரசு என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

பஞ்சாப் அரசு, இந்திய மாநிலமான பஞ்சாபின் அரசாகும். (பாகிஸ்தானிலும் பஞ்சாப் மாகாணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) மாநில அரசானது செயலாட்சிப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.

பஞ்சாப் அரசு
தலைமையிடம்சண்டிகர்
செயற்குழு
ஆளுநர்பன்வாரிலால் புரோஹித்
முதலமைச்சர்பகவந்த் மான்
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
உறுப்பினர்கள்117
நீதித்துறை
உயர் நீதிமன்றம்பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிசியாவக் ஜல் வசீப்தர்

செயலாட்சிப் பிரிவுக்கு ஆளுநர் தலைமை தாங்குவார். இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அரசின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார். பஞ்சாபின் சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் சண்டிகரில் அமைந்துள்ளன. மாநிலம் முழுவதுக்குமான நீதிக்கு உயர்நீதிமன்றம் பொறுப்பேற்கிறது.[1]

தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறையில் அமைக்கப்பட்டது. இதில் 117 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும்.[2]

சான்றுகள் தொகு

  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
  2. "Punjab Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_பஞ்சாப்_அரசு&oldid=3749200" இலிருந்து மீள்விக்கப்பட்டது