இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை)

இரண்டாம் லூசியுஸ் (Lucius II) 1144-45 காலகட்டத்தில் திருத்தந்தையாக இருந்தவர். இவர் இத்தாலியில் போலோனா என்ற பிறந்தவர் ஒரு அருள்பணியாளராக பேராலயதின் சட்ட வல்லுனராயிருந்தார். கி.பி 1124 ம் ஆண்டு சாந்தா குரோஸ் ஆலயத்தில் கர்தினால் குருவாக நியமிக்கப்பட்டார். கி.பி 1125 ல் திருத்தந்தையின் பிரதிநிதியாக ஜெர்மனிக்கு அனுப்பட்டார். புனித நார்பெட்,மாதெபெர்க் ஆயராக இவரால்தான் நியமனம் செய்யப்பட்டார் திருதந்தை இரண்டாம் இன்னோசென்டை எதிர் பாப்பு அனக்லிட்டிமிருந்து இவர்தான் பாதுகாத்தார். இவர் இரண்டாம் இன்னோசென்ட் திருதந்தையின் ஆவணக்காப்பாளராகவும் நூலுகக்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் .

இரண்டாம் லூசியஸ்
166ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்மார்ச்சு 9, 1144
ஆட்சி முடிவுFebruary 15, 1145
முன்னிருந்தவர்இரண்டாம் செலஸ்தீன்
பின்வந்தவர்மூன்றாம் யூஜின்
பிற தகவல்கள்
இயற்பெயர்Gherardo Caccianemici dal Orso
பிறப்பு???
போலோக்னா, திருத்தந்தை நாடுகள் dead=dead
இறப்பு(1145-02-15)பெப்ரவரி 15, 1145
உரோமை
லூசியஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

கி.பி 1144 மார்ச் 12 இல் தேர்வு செய்யப்பட்டு திருத்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார். திருதந்தை என்ற நிலையில் சிசிலி நாட்டு மன்னன் ரோஜருடன் சமாதானம் செய்ய விருப்பினார் ஆனால் மன்னரின் எதிர்பார்ப்புகள் மட்டு மீறியதாயிருந்தது என்வே அந்த உறவு தேவையில்லை என்று கர்தினால்கள் கருத்துத் தெரிவித்தனர். மன்னன் போருக்கு தயரானான். பேரரசரின் உதவியை நாடினார் பாப்பு. ஆனால் கை கூடவில்லை உரோமையை காபாற்ற வேறு வழியில்லாத்தால் மன்னன் ரோஜருக்கு எதிராக பாப்புவே சிறு படையுடன் போராடினார். ஆனால் வெற்றி இயலவில்லை. போரில் அடைந்த காயம் திருதந்தையின் மரணத்திற்குக் காரணமாயிற்று. லூசியஸ் கி.பி 1145 பிப்ரவரி 15 இல் காலமானார்.

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் செலஸ்தீன்
திருத்தந்தை
1144–45
பின்னர்
மூன்றாம் யூஜின்