இஸ்ரவேலின் நாதாபு

இஸரவேலின் பலிகள்

நாதாபு (Nadab) வடக்கு இசுரேலிய இராச்சியத்தின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் எரொபவாமின் மகனும், இராச்சியத்தின் வாரிசும் ஆவார்.

இசுரவேலின் நாதாபு
இசுரேலின் மன்னர்
ஆட்சிக்காலம்கிமு 910 - கிமு 909
முன்னையவர்செரபோம்
பின்னையவர்பாசா

யூதாவின் அரசரான ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், எரொபவாவின் மகன் நாதாபு இஸ்ரேலின் அரசரானார்.[1][2] வில்லியம் எஃப். ஆல்பிரைட் என்பவர் கி.மு 901 - 900 வரை இவர் ஆட்சி செய்ததாக குறிப்பிடுகிறார்.[3]

நாதாபும், இசுரேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டியிருக்கையில் அவனுடைய தளபதிகளுள் ஒருவனான பாசா அவனுக்கு எதிராகக் கலகம் பண்ணி அவனைக் கொன்று போட்டான். பின் அவனே இசுரவேலுக்கு மன்னரானான்.[2] நாதாபைக் கொன்ற பின் பாசா அவன் வீட்டார் அனைவரையுமே கொன்று போட்டான்.

சிலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின் படி எரொபாவின் குடும்பத்தவர் அனை வரையும் பாசா அழித்தான்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1 Kings 15:25
  2. 2.0 2.1 2.2 "Nadav", Jewish Encyclopedia
  3. Edwin Thiele, The Mysterious Numbers of the Hebrew Kings, (1st ed.; New York: Macmillan, 1951; 2d ed.; Grand Rapids: Eerdmans, 1965; 3rd ed.; Grand Rapids: Zondervan/Kregel, 1983). ISBN 0-8254-3825-X, 9780825438257
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்ரவேலின்_நாதாபு&oldid=3454606" இலிருந்து மீள்விக்கப்பட்டது