உர்ஜித் படேல்

டாக்டர் உர்சித் ஆர் படேல் (பிறப்பு அக்டோபர்  1963) சிறந்த வங்கியாளர் மற்றும் பொருளாதார நிபுணரும் ஆவார். 2013 முதல் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணியாற்றிய இவர், திரு ரகுராம் ராஜனுக்கு பின் செப்டம்பர் 4, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக நியமிக்கபட்டார். டிசம்பர் 2018ல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். [1]

உர்சித் படேல்
சேர்மன், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 ஜூன் 2020
24வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
பதவியில்
4 செப்டம்பர் 2018 – 10 டிசம்பர் 2018
முன்னையவர்ரகுராம் ராஜன்
பின்னவர்சக்திகாந்த தாஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 அக்டோபர் 1963 (1963-10-28) (அகவை 60)
நைரோபி, கென்யா
தேசியம்இந்தியன்
முன்னாள் கல்லூரிஇலண்டன் பொருளியல் பள்ளி (BEC)
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (M. Phil.)
யேல் பல்கலைக்கழகம் (முனைவர்)
கையெழுத்து

தற்போது தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் சேர்மனாக பணியாற்றிவருகிறார்.

இளமையும் கல்வியும் தொகு

இவர் லன்டன் பொருளாதார பள்ளியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 1990 ஆம் ஆண்டு ஏல் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்[2]

வகித்த பதவிகள் தொகு

  • ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி
  • ஆலோசகர், பாஸ்டன் கன்சல்டிங் குரூப்
  • தலைவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் லிமிடட் 2015.
  • ரிசர்வ் வங்கியின் துணை நிலை ஆளுநர்
  • சர்வதேச நாணய நிதியம்

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. Who is Urjit Patel? Everything you need to know about the new RBI Governor
  2. ""Profile on Brookings Institution"". பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்ஜித்_படேல்&oldid=3439430" இலிருந்து மீள்விக்கப்பட்டது