உளுந்தூர்பேட்டை வட்டம்

உளுந்தூர்பேட்டை , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல்நிலை நகராட்சி ஆகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] [2] இந்த வட்டத்தின் தலைமையகமாக உளுந்தூர்பேட்டை உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 144 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]இவ்வட்டத்தில் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

உளுந்தூர்பேட்டை
வருவாய் வட்டம்
உளுந்தூர்பேட்டை is located in தமிழ் நாடு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 11°42′N 79°17′E / 11.7°N 79.28°E / 11.7; 79.28
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கள்ளக்குறிச்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,69,357
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்606107
தொலைபேசி குறியீடு04149
வாகனப் பதிவுTN-15

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 373,621 ஆகும். அதில் 188,584 ஆண்களும், 185,037 பெண்களும் உள்ளனர். 82,910 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 93.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 67.87% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 48013 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 937 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,20,127 மற்றும் 590 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.33%, இசுலாமியர்கள் 3.55%, கிறித்தவர்கள் 4.82% , சமணர்கள் 0..01% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உளுந்தூர்பேட்டை_வட்டம்&oldid=3834289" இலிருந்து மீள்விக்கப்பட்டது