ஏனோக்கு (Enoch, எபிரேய மொழி:חֲנוֹךְ; அரபு மொழி: إدريسʼIdrīs) என்பவர் விவிலியத்தின் படி, நோவாவின் தந்தையான மெத்துசேலாவின் தந்தை. இவர் ஆதாமுக்குப் பின், சேத்து வழிவந்த ஏழாம் தலைமுறையை சேர்ந்தவர்.[1] இவரின் தந்தை எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, இவர் பிறந்ததாக விவிலியம் கூறுகின்றது. ஏனோக்கு என்ற பெயருக்கு அர்ப்பணிப்பு என்று பொருள்.

ஏனோக்கு
Enoch, the Patriarch
செனசிசு 5:24: "கடவுள் ஏனோக்கை எடுத்துக்கொண்டார்." (1728)
புனித முன்னோர், Antediluvian Patriarch, தீர்க்கதரிசி
ஏற்கும் சபை/சமயங்கள்ஆர்மீனிய அப்போஸ்தலத் திருச்சபை
ஆர்மீனியக் கத்தோலிக்கத் திருச்சபை
இசுலாம்
திருவிழாசூலை 30
பெற்றோர்ஜரெட்

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இவரைப்பற்றிக் குறிக்கையில், "ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.[2] [3] மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)

விவிலியத்தில் இவரைப்பற்றி மிகக் குறுகிய வசனமே காணப்பட்டாலும், பல பழைய ஏற்பாடு ஆர்வளர்களிடையே முக்கியத்துவம் பெறுகின்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. http://biblehub.com/jude/1-14.htm
  2. 65 years according to the Masoretic Text; 165 years according to the Septuagint. Larsson, Gerhard. “The Chronology of the Pentateuch: A Comparison of the MT and LXX.” Journal of Biblical Literature, vol. 102, no. 3, 1983, pp. 402. www.jstor.org/stable/3261014.
  3. William Morfill (1896). The Book of the Secrets of Enoch, Chap. 2.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஏனோக்கு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏனோக்கு&oldid=2191916" இலிருந்து மீள்விக்கப்பட்டது