ஓமந்தை தொடருந்து நிலையம்

ஓமந்தை தொடருந்து நிலையம் (Omanthai railway station, ஓமந்தை புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இந்நிலையம் புனரமைக்கப்பட்டு 2011 மே 27 முதல் மீண்டும் சேவையாற்றுகின்றது.[1] அன்றில் இருந்து யாழ்தேவி சேவை கொழும்பில் இருந்து ஓமந்தை வரை சேவையாற்றி வந்தது. 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரை ஓமந்தையூடாக யாழ்தேவி பயணம் மேற்கொண்டது.[2] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[3]

ஓமந்தை
Omanthai
இலங்கை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஓமந்தை
இலங்கை
ஆள்கூறுகள்8°52′13.80″N 80°30′03.50″E / 8.8705000°N 80.5009722°E / 8.8705000; 80.5009722
உரிமம்இலங்கை ரெயில்வே
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
வரலாறு
மறுநிர்மாணம்27 மே 2011
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   இலங்கை ரெயில்வே   அடுத்த நிலையம்
தாண்டிக்குளம்
(கொழும்பு கோட்டையில் இருந்து)
  யாழ் தேவி   புளியங்குளம்
(காங்கேசன்துறை நோக்கி)
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

சேவைகள் தொகு

2013 செப்டம்பர் 14 முதல் நாள்தோறும் கொழும்பில் இருந்து ஓமந்தையூடாக கிளிநொச்சி வரை யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி), மற்றும் இரவுத் தபால் வண்டி ஆகிய பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Ali, Rifthy (27 May 2011). "Thandikulam to Omanthai railway operational". Daily Mirror. http://www.dailymirror.lk/news/11617--thandikulam-to-omanthai-railway-operational.html. பார்த்த நாள்: 10 August 2013. 
  2. 23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 14, 2013
  3. "கிளிநொச்சி - பளை ரயில் சேவை நேற்று சுபவேளையில் ஆரம்பம்". தினகரன் (இலங்கை). 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. கொழும்பு, கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள் பரணிடப்பட்டது 2013-09-17 at the வந்தவழி இயந்திரம், தினகரன், செப்டம்பர் 13, 2013