கஜபதி பேரரசு

மத்தியகால இந்துப் பேரரசு

கஜபதி பேரரசு (Gajapati Kingdom) (ஆட்சி காலம்: 1434 முதல் 1541 முடிய), இந்தியாவின் கட்டக் நகரத்தை தலைநகராகக் கொண்டு, தற்கால ஒடிசா, மேற்கு வங்காளம், தெற்கு பிகார், ஆந்திரம், மத்திய - கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளை 1434 முதல் 1541 முடிய ஆண்ட, மத்தியகால இந்து பேரராசாகும்.

கஜபதி பேரரசு
கிபி 1434–கிபி 1541
கபிலேந்திர தேவன் காலத்திய கஜபதி பேரரசின் வரைபடம்
கபிலேந்திர தேவன் காலத்திய கஜபதி பேரரசின் வரைபடம்
தலைநகரம்கட்டக்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
கஜபதி கௌடேஸ்வர நவகோடி உத்கல கலாவர்கேஷ்வரர் 
• 1434 – 1466
கபிலேந்திர தேவன்
• 1466–97
புருசோத்தம தேவன்
• 1497 – 1540
பிரதாப ருத்திர தேவன்
• 1540 – 1541
கழுவத் தேவன்
• 1541
ககாருவத் தேவன்
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• தொடக்கம்
கிபி 1434
• முடிவு
கிபி 1541
முந்தையது
பின்னையது
கீழை கங்கர்
[[ரெட்டிப் பேரரசு]]
[[விசயநகரப் பேரரசு]]

கஜபதி பேரரசை 1434இல் நிறுவிய கபிலேந்திரா தேவன், 1434 முதல் 1466 முடிய பேரரசை ஆண்டார். கஜபதி பேரரசர்களில் சிறப்பானவர்கள், புருசோத்தம தேவன் (1466 - 1497) மற்றும் பிரதாப ருத்திர தேவன் (1497-1540). கடைசிப் பேரரசன் ககாருவத் தேவனை 1541இல், கோவிந்த வித்தியாதரன் என்பவன் கொன்று போய் குல அரசை (Bhoi dynasty) நிறுவினான்.

கஜபதி எனில் பெரும் யாணை படைகளை கொண்ட அரசன் என்று பொருள்.

புரி தேர்த் திருவிழாவின் போது, கஜபதி பேரரசின் வழித்தோன்றல்களுக்கு இன்றளவும், கோயில் சார்பாக மரியாதை செய்யப்படுகிறது.

கஜபதி பேரரசை கௌரவிக்கும் வகையில் ஒடிசா அரசு ஒரு மாவட்டத்திற்கு கஜபதி மாவட்டம் என்று பெயரிட்டுள்ளது.[1]

கஜபதி பேரரசின் ஆட்சியாளர்கள் தொகு

  1. கபிலேந்திர தேவன் (1434–70)[2]
  2. புருசோத்தம தேவன் (1470–1497)
  3. பிரதாப ருத்திரத் தேவன் (1497–1540)
  4. கழுவத்தேவன் (1540–41)
  5. ககாருவத் தேவன் (1541)


மேற்கோள்கள் தொகு

  1. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp. 365–72.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜபதி_பேரரசு&oldid=3497324" இலிருந்து மீள்விக்கப்பட்டது