கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (இலங்கை)

கல்விப் பொதுத் தராதரம் (சாதாரண தரம்) அல்லது க.பொ.த (சா/த) இலங்கையிலுள்ள கல்விப் பொதுத் தராதர தகமையாகும். இது பரீட்சைகள் திணைக்களத்தினாலும் கல்வி அமைச்சினாலும் நடத்தப்படுகிறது.[1] இது பிரித்தானிய சாதாரண தர படிநிலையின் அடிப்படையில் அமைந்தது. சாதாரண தரம் மாணவர்களால் மேல் இரண்டாம் கல்வியின் இறுதியில் (தரம் 9, 10) எடுக்கப்படுகிறது. 15-16 வயது காலத்தில் வெளியிலிருந்து அல்லது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களால் தோற்றப்படுகிறது. இதன் பரீட்சைகள் சிங்களம், தமிழ், ஆங்கில ஆகிய மொழி மூலங்களில் நடைபெறுகிறது.

உசாத்துணை தொகு

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு