காசோலை அவமதிப்பு

காசோலை அவமதிப்பு அல்லது மதிப்பிழந்த காசோலை (dishonoured cheque) என்பது வங்கி பணம் செலுத்த மறுக்கும் காசோலையைக் குறிப்பதாகும். ஒரு வங்கி காசோலையை ஏற்க மறுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, போதுமான அளவு நிதி இல்லாமை (NSF) மிகவும் பொதுவான ஒன்றாகும், இது காசோலை எடுக்கப்பட வேண்டிய கணக்கில் போதுமான நிதி இல்லை என்பதைக் குறிக்கிறது. இது தவறான காசோலை, மதிப்பிழந்த காசோலை, மறுதலிக்கப்பட்ட காசோலை, குளிர் காசோலை, இரப்பர் காசோலை, திரும்பிய உருப்படி அல்லது சூடான காசோலை (hot check) என குறிப்பிடப்படலாம். தொலைந்து போன காசோலைகள் அல்லது மறுதலிக்கப்பட்டவை ஆகியன தாமதமாக பணம் செலுத்துவதுடன் வாடிக்கையாளர்களுடனான உறவையும் பாதிக்கிறது. இங்கிலாந்து, வேல்சு மற்றும் ஆத்திரேலியாவில், இத்தகைய காசோலைகள் பொதுவாக "வழங்குநரைப் பார்க்கவும்" என்று ஒப்புதல் அளிக்கப்படுகின்றன, இது ஏன் செலுத்தப்படவில்லை என்பதற்கான விளக்கத்திற்கு காசோலையை வழங்கும் நபரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. [1]

மதிப்பிழப்பதற்கான காரணங்கள் தொகு

பின்வரும் காரணங்களுக்காக காசோலைகள் மதிப்பிழக்கப்படலாம்,

  • காசோலையின் மதிப்பை ஈடுகட்ட, கணக்கில் போதுமான நிதி இல்லாமை.
  • கணக்கு வைத்திருப்பவர் காசோலையை செலுத்த வேண்டாம் என்று வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளார் (நிறுத்தப்பட்ட காசோலை என அழைக்கப்படுகிறது).
  • கணக்கு வைத்திருப்பவரின் நிதி முடக்கப்பட்டுள்ளது.
  • தவறான காசோலை வழங்கப்பட்டதாலோ, கணக்கு எண்ணை எழுதுவதில் ஏற்பட்ட பிழையினாலோ அல்லது கணக்கு மூடப்பட்டதாலோ, உண்மையில் அவ்வாறான கணக்கு இல்லாமல் இருக்கும் சமயத்தில்.
  • காலாவதியானது, காசோலையின் தேதிக்கு முன் பணமாக்கப்பட்டது அல்லது காசோலையின் தேதி தவறாக உள்ளது.
  • எண்களில் எழுதப்பட்ட தொகைகளிலும் சொற்களில் உள்ள தொகையிலும் முரண்பாடு இருக்கும் சமயத்தில்.
  • மேலெழுதப்பட்டுள்ளது.
  • காசோலையில் உள்ள கையொப்பம், கணக்கு வைத்திருப்பவர் அல்லது கணக்கில் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரின் கோப்பில் உள்ள கையொப்பத்துடன் பொருந்தாமல் இருப்பது அல்லது காசோலையில் உள்ள MICR பட்டையைத் தொட்டுள்ளது.
  • காசோலை சேதமடைந்துள்ளது.

செயல்முறை தொகு

வங்கியானது மதிப்பிழக்கச் செய்யும் காசோலையைப் பெற்றால், போதுமான அளவு நிதில் இல்லை என்பதை மேலாளர் மரியாதை நிமித்தமாக வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு நிலைமையைப் பற்றி ஆலோசனை கூறலாம். மதிப்பிழப்பதைத் தவிர்க்க வங்கி வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை.

சட்டச் சிக்கல்கள் தொகு

இந்தியாவில், மறுதலிக்கப்பட்ட காசோலை என்பது குற்றச் செயலாகும். செலாவணி முறிச் சட்டம், 1881 இன் படி, இதனால் அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். [2] [3]

சான்றுகள் தொகு

  1. Ward, Paul (2010). Tort Law in Ireland. Kluwer Law International, 2010. பக். 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9041133321. https://books.google.com/books?id=Wg84vgEACAAJ. பார்த்த நாள்: 29 September 2017. 
  2. "THE NEGOTIABLE INSTRUMENTS ACT, 1881 ACT NO. 26 OF 1881". 1881.
  3. "The legal consequences with bounced cheques! - Yahho India Finance".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசோலை_அவமதிப்பு&oldid=3744222" இலிருந்து மீள்விக்கப்பட்டது