காஞ்சிக்கோயில்

இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை வட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி.

காஞ்சிக்கோயில் (ஆங்கிலம்:Kanjikoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

காஞ்சிக்கோயில்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பெருந்துறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,294 (2011)

565/km2 (1,463/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kanjikoi

இப்பேரூராட்சியில் உள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இக்குளம் மூலம் நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம் மற்றும் 4 கிராம ஊராட்சிகளுக்கு, 'கூட்டுக்குடிநீர் திட்டம்' மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.

அமைவிடம் தொகு

காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு கிழக்கில் 18 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் கவுந்தப்பாடி 8 கி.மீ.; வடக்கில் பவானி 15 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 8 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 39 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,468 வீடுகளும், 11,294 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கஞ்சிக்கோவில் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kanjikoil Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிக்கோயில்&oldid=3001612" இலிருந்து மீள்விக்கப்பட்டது