கிர்டாட்ஸ் அருங்காட்சியகம்

கேரள பட்டியல் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சி ஆய்வுகள் ஆராய்ச்சி பயிற்சிக்கான கேரள கல்வி நிறுவனம் (கிர்டாட்ஸ்) (Kerala Institute for Research Training and Development Studies of Scheduled Castes and Scheduled Tribes (KIRTADS)) என்பது கேரளத்தின் கோழிக்கோட்டின் செவ்வயூர் அருகே செவரம்பலத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். [1]

இது கேரள அரசின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு (எஸ்.சி.எஸ்.டி.டி.டி) அமைச்சின் கீழ் செயல்படுகிறது. கேரளத்தில் திட்டமிடப்பட்டவகையில் சமூகங்களிடையே வளர்ச்சியை மேம்படுத்த உதவும் ஆராய்ச்சியை மேற்கொள்வதே இதன் முக்கிய நோக்கம். மக்கள்கூட்டத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரின் தேவைகளையும், சிக்கல்களையும் அடையாளம் காணவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தீர்வை கண்டுபிடறிந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்க இது முயற்சிக்கிறது.

இந்த அருங்காட்சியகம் 1972 ஆம் ஆண்டில் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக (டி.ஆர் & டி.சி) தேசிய வடிவத்தில் நிறுவப்பட்டது. பின்னர் இது 1979 இல் கிர்டாட்ஸ் என பெயர்பெற்றது. இந்த ஆய்வு நிறுவனம் கோழிக்கோடு செவயூர் பிருந்தாவன் காலனியில் அமைந்துள்ளது. மானுடவியல் ஆராய்ச்சி தவிர, இந்த நிறுவனம் பயிற்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வு செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் துணை பிரிவாக ஒரு குறிப்புதவி நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் மாந்தவியல், சமூகவியல் தொடர்புடைய நூல்கள் உள்ளன. இங்குள்ள இனவியல் அருங்காட்சியகத்தில் கேரள தொல் குடியினர் பயன்படுத்திய ஆயுதங்கள், பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

குறிப்புகள் தொகு