குறிஞ்சிப்பாடி வட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டம் என்பது தமிழ்நாட்டில், கடலூா் மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் தலைமையகம் குறிஞ்சிப்பாடி நகரத்தில் உள்ளது. இவ்வட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி என இரண்டு உள்வட்டங்களும், 71 வருவாய் கிராமங்களும்மற்றும் நெய்வேலி நகரியம் ஆகியவற்றை கொண்டது. [2]

இவ்வட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. வடலூர் இந்த தாலுகாவில் உள்ள பெரிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 331,755 ஆகும். அதில் 167,497 ஆண்களும், 164,258 பெண்களும் உள்ளனர். 81,536 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 47.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 80.79% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 32494 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 883 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 83,196 மற்றும் 2,390 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.5%, இசுலாமியர்கள் 2.08%, கிறித்தவர்கள் 6.25% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சிப்பாடி_வட்டம்&oldid=3832590" இலிருந்து மீள்விக்கப்பட்டது