கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையம்
கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையம் (Guduvancheri railway station, நிலையக் குறியீடு:GI) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.
கூடுவாஞ்சேரி | |
---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை - 45, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 12°50′42″N 80°3′25″E / 12.84500°N 80.05694°E |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | GI |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | 9 சனவரி 1965[1] |
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே |
அமைவிடம் | |
இது சென்னையின் புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 40 கி.மீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் கூடுவாஞ்சேரியில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 36மீ (118 அடி) உயரத்தில் உள்ளது.
வரலாறு தொகு
தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)