சவந்த்வாடி தாலுகா

சவந்த்வாடி தாலுகா (SAWANTWADI taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் சாவந்த்வாடி நகரம் ஆகும். 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 நகராட்சி மன்றம், 2 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 82 வருவாய் கிராமங்களைக் கொண்டது. [2] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இத்தாலுகா சாவந்த்வாடி சமஸ்தானத்தில் இருந்தது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 147,466 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 72,944 மற்றும் பெண்கள் 74,522 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 12426 - 8% ஆகும். சராசரி எழுத்தறிவு 86.71% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 8,350 மற்றும் 1,061 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92%, இசுலாமியர்கள் 3.98%, பௌத்தர்கள் 0.44%, கிறித்துவர்கள் 3.26% மற்றும் பிறர் 0.32% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவந்த்வாடி_தாலுகா&oldid=3536896" இலிருந்து மீள்விக்கப்பட்டது