சிர்மூர் இராச்சியம்

சிர்மூர் (Sirmur) (also spelled as Sirmor, Sirmaur, Sirmour or Sirmoor) இந்தியத் துணைக்கண்டத்தில், ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவின் தலைவரான கரம் பிரகாஷ் என்பவரால் 1616ல் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய அமைவிடம், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் ஆகும். சிர்மூர் இராச்சியத்தை ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவினர் ஆண்டனர்.[1]

சிர்மூர் இராச்சியம்
सिर्मूर रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1616–1948

Coat of arms of சிர்மூர் இராச்சியம்

சின்னம்

Location of சிர்மூர் இராச்சியம்
Location of சிர்மூர் இராச்சியம்
1911ல் பஞ்சாப் மாகாண வரைபடத்தில் சிர்மூர் இராச்சியம்]]
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1616
 •  இந்தியப் பிரிவினை 1948
பரப்பு
 •  1901 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 4,039 km2 (1,559 sq mi)
Population
 •  1901 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1,35,626 
மக்கள்தொகை அடர்த்தி 33.6 /km2  (87 /sq mi)
தற்காலத்தில் அங்கம் இமாச்சலப் பிரதேசம், இந்தியா
Gazetteer of the Sirmur State. புது தில்லி: Indus Publishing. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-056-9. இணையக் கணினி நூலக மையம்:41357468. 
சிர்மூர் மன்னர் கிராத பிரகாஷ், ஆண்டு 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி
சிர்மூர் இராச்சியத்தின் தலைநகரம் நஹான்
1800களில் சிர்மூர் இராச்சியம் வெளியிட்ட அஞ்சல் தலை

இமயமலையில் அமைந்த சிர்மூர் இராச்சியம் 1198 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த இராச்சியத்தின் 1891 ஆம் ஆண்டு வருவாய் 300,000 ரூபாய் ஆகும்.

வரலாறு தொகு

கோர்க்கா மன்னர் ராணா பகதூர் ஷாவின் ஆட்சிக் காலத்தில், சிர்மூர் இராச்சியம், கார்வால் மற்றும் குமாவுன் பகுதிகளை வென்று நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

பின்னர் கிபி 1814–16ல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவின் போது ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாளிகள் கைப்பற்றிருந்த சிர்மூர் இராச்சியம் உட்பட கார்வால், குமாவுன் மற்றும் சிக்கிம் பகுதிகள் பிரித்தானிய இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

சிர்மூர் இராச்சியம் 1816 முதல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசிற்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானமாக, இந்திய விடுதலை வரை இருந்தது. பின்னர் 1948ல் சிர்மூர் இராச்சியம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள் தொகு

மன்னர் பெயர் ஆட்சித் துவக்கம் ஆட்சி முடிவு
கரம் பிரகாஷ் 1616 1630
மாந்தாதா பிரகாஷ் 1630 1654
சோபாக் பிரகாஷ் 1654 1664
புத்த பிரகாஷ் 1664 1684
மத்த பிரகாஷ் 1684 1704
ஹரி பிரகாஷ் 1704 1712
விஜய் பிரகாஷ் 1712 1736
பிரதாப் பிரகாஷ் 1736 1754
கிராத பிரகாஷ் 1754 1770
ஜெகத் பிரகாஷ் 1770 1789
தரும பிரகாஷ் 1789 1793
கரம் பிரகாஷ் II 1793 1803
ரத்தன் பிரகாஷ், நேபாள ஷா வம்ச மன்னரால் நியமிக்கப்பட்டவர். பிரித்தானிய இந்தியாவின் அரசால் 1804ல் தூக்கிலிடப்பட்டவர். 1803 1804
கர்ம பிரகாஷ் II (1820ல் இறப்பு) 1804 1815
பதே பிரகாஷ் 1815 1850
ரகுவீர் பிரகாஷ் (1827-1856) 1850 1856
சாம்செர் பிரகாஷ் (1846 – 1898) 1856 1898
சுரேந்திர விக்ரம் பிரகாஷ் 1898 1911
அமர் பிரகாஷ் 1911 1933
ராஜேந்திர பிரகாஷ் 1933 1964
உதய் பிரகாஷ் 1954

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்மூர்_இராச்சியம்&oldid=3381035" இலிருந்து மீள்விக்கப்பட்டது