சி. பி. சிற்றரசு
சி. பி. சிற்றரசு (ஏப்ரல் 11, 1906[1] - பெப்ரவரி 16, 1978[1] ) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்[2]. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
சி. பி. சிற்றரசு | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் தலைவர் | |
பதவியில் 23 ஏப்ரல் 1970 – 20 ஏப்ரல் 1976 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 11, 1906 |
இறப்பு | 16 பெப்ரவரி 1978 | (அகவை 71)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் | சி.கே.பெத்தசாமி நாயுடு - இலட்சுமி அம்மாள் |
வாழிடம்(s) | காஞ்சிபுரம் , தமிழ்நாடு, இந்தியா |
சி.பி.சிற்றரசின் இயற்பெயர் சின்னராஜ் . தந்தையின் பெயர் சி.கே.பெத்தசாமி நாயுடு , தாயார் பெயர் இலட்சுமி அம்மாள். இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் [3][4] . இவர் 1906- ஏப்ரல் 11ஆம் நாள் பிறந்தார்.[1] கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாவுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949இல் திமுகவை அண்ணா உருவாக்கிய போது அதில் இணைந்தார்.[5]
குடும்பம் தொகு
சி.பி.சிற்றரசுக்கு சரசுவதி என்னும் மகள் இருந்தார்.[6] சரசுவதிக்கும் பி.வரதராசலு நாயுடு என்பவர் மகன் பி.வ.சுதர்சனன் என்பவருக்கும் 6-9-1959ஆம் நாள் சென்னை லாயிட்சு ரோட்டில் கதவெண்-156லிருந்த தென்னிந்த நடிகர்சங்கக் கட்டிடத்தில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திருமணம் நடந்தது.[7]
இதழாளர் தொகு
- 1952 ஆகஸ்டு 22ஆம் நாள் தீப்பொறி என்னும் வார இதழைத் தொடங்கினார்.[8]
- 1956 மே 3ஆம் நாள் "தீச்சுடர்" என்னும் என்னும் இதழைத் தொடங்கினார்.[9]
- 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திரைப்படம் தொகு
1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
நூல்கள் தொகு
சிற்றரசு பின்வரும் நூல்களை எழுதியுள்ளார்:
வ.எண் | நூலின் பெயர் | வகை | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
01 | இரத்த தடாகம் | நாடகம் | ? | ? | |
02 | இலங்கை எதிரொலி | சொற்பொழிவுகள் | 1953 திசம்பர் | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
03 | உலக விஞ்ஞானிகள் | வாழ்க்கை வரலாறு | 1979 ஆகஸ்ட் | பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 | 12 அறிவியலாளர்களின் வரலாறு |
04 | உலகை திருத்திய உத்தமர்கள் | வாழ்க்கை வரலாறு | 1979 சூன் | பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 | 18 மெய்யிலாளர்களின் வரலாறு |
05 | எமிலி ஜோலா - முதற்பாகம் | கட்டுரைகள் | 1952 மே | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
06 | எமிலி ஜோலா - இரண்டாம் பாகம் | கட்டுரைகள் | 1952 செப்டம்பர் | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
07 | கொலம்பஸ் | வாழ்க்கை வரலாறு | 1952 | திராவிடப்பண்ணை, திருச்சி.[10] | |
08 | சரிந்த சாம்ராஜ்யங்கள் | வரலாறு | 1958 மே | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
09 | சாக்கிய சிம்மன் | ? | 1952 திசம்பர் | திராவிடப்பண்ணை, திருச்சி.[11] | |
10 | சாய்ந்த கோபுரம் | வாழ்க்கை வரலாறு | 1951 நவம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [12] | மாஜினியின் வாழ்க்கை வரலாறு |
11 | சிந்தனைச் சுடர் | ? | ? | ? | |
12 | சீனத்தின் குரல் | வரலாறு | 1953 மே | தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி | |
13 | சுதந்திரத் தந்தை ரூசோ | வரலாறு | ? | ? | |
14 | சேரனாட்டதிபதி | நாடகம் | ? | ? | |
15 | சோகச்சுழல் | கதை}}1951 | இராஜன் பதிப்பகம், மேட்டுப்பாளையம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம் | ||
16 | தங்க விலங்கு | நாடகம் | 1951 ஆகத்து | தமிழ்மன்றம், திருச்சி [13] | |
17 | போர்வாள் | நாடகம் | ? | ? | |
18 | மந்திரமுட்டை | ? | ? | ? | |
19 | மதி | நாடகம் | 1951 நவம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [14] | |
20 | மார்ட்டின் லூதர் | வாழ்க்கை வரலாறு | 1951 செப்டம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [13] | |
21 | விடுதலை வீரன் | வாழ்க்கை வரலாறு | ? | ? | ஆப்ரகாம் லிங்கன் வரலாறு |
22 | விஷக்கோப்பை | வாழ்க்கை வரலாறு | 1952 | தமிழ்மன்றம், திருச்சி [13] | சாக்ரடீஸ் வரலாறு |
23 | வெங்கலச்சிலை | வாழ்க்கை வரலாறு | 1951 செப்டம்பர் | தமிழ்மன்றம், திருச்சி [13] | லெனின் வரலாறு |
24 | ரோம்நாட்டு வீரன் | வாழ்க்கை வரலாறு | 1958 | முத்துவேல் பதிப்பகம், திருச்சி[15] | |
25 | ஜோதிப்பெண் | ? | ? | ? |
இவைதவிர "புறப்படு மகனே", "பேரனுக்கு" ஆகிய தொடர்களை இனமுழக்கம் இதழிலும் "கபாடபுரம்" என்னும் தொடரை முன்னணி இதழிலும் எழுதியுள்ளார்.[16]
திரைப்படம் தொகு
1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
தேர்தல் தொகு
1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[17] 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[18]
சட்ட மேலவைத்தலைவர் தொகு
1964ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-04-23 முதல் 1976-04-20ஆம் நாள் வரை அந்த அவையின் தலைவராகப் பணியாற்றினார்.[1]
வெளிநாட்டுப்பயணம் தொகு
1970 அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் நாடுகளின் 16ஆவது மாநாடு நடைபெற்றது; அதில் தமிழ்நாட்டின் சார்பில் சிற்றரசு கலந்துகொண்டார்.[1]
அ.தி.மு.க.வில் தொகு
1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
மரணம் தொகு
1978-பிப்ரவரி-16ஆம் நாள் நோய்வாய்பட்டு மரணமடைந்தார்.
நினைவேந்தல் தொகு
1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
சான்றடைவு தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 தமிழரசு 01-03-1978, பக்.48
- ↑ விஜயாபானு, தொகுப்பாசிரியர் (1972). ஜாதிப்பூ. ஏகம்மை நிலையம். https://books.google.co.in/books?id=Z3gdVF06YMEC&dq=திரு.+சி.+பி.+சிற்றரசு+மேலவைத்+தலைவர்%2C+தமிழ்நாடு+அரசு%2C+சென்னை-+9&focus=searchwithinvolume&q=திரு.+சி.+பி.+சிற்றரசு+மேலவைத்+தலைவர்%2C+தமிழ்நாடு+அரசு%2C++-+9.
- ↑ க. திருநாவுக்கரசு, தொகுப்பாசிரியர் (1999). திராவிட இயக்கத் தூண்கள். நக்கீரன் பதிப்பகம். பக். 157. https://books.google.co.in/books?id=8gRuAAAAMAAJ&dq=சி.பி.சிற்றாசின்+இயற்பெயர்+%27+சின்னராஜ்+++தந்தையின்+பெயர்+பெத்தசாமி+நாயுடு%3B+தாயார்+பெயர்+இலட்சுமி+அம்மாள்&focus=searchwithinvolume&q=சி.பி.சிற்றாசின்+இயற்பெயர்+%27+சின்னராஜ்+++தந்தையின்+பெயர்+பெத்தசாமி+நாயுடு%3B+தாயார்+பெயர்+இலட்சுமி+அம்மாள்+காஞ்சிபுரம்++இவர்களது+சொந்த+ஊர். "சி.பி.சிற்றாசின் இயற்பெயர் ' சின்னராஜ் தந்தையின் பெயர் பெத்தசாமி நாயுடு; தாயார் பெயர் இலட்சுமி அம்மாள் இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம்"
- ↑ Tamil Nadu (India). Legislature. Legislative Council, தொகுப்பாசிரியர் (1972). Who is who, Volume 7. Legislative Council Departmen. பக். 21. https://books.google.co.in/books?id=xFbyYt6he9AC&q=கே.+பெத்தசாமி+நாயுடு+;+தாயார்+பெயர்+லட்சுமி+அம்மாள்&dq=கே.+பெத்தசாமி+நாயுடு+;+தாயார்+பெயர்+லட்சுமி+அம்மாள்&hl=en&sa=X&ved=0ahUKEwjTpsOH_KTlAhUNY48KHcPRAE8Q6AEIKTAA.
- ↑ திராவிட இயக்கத் தூண்கள் - க. திருநாவுக்கரசு; நக்கீரன் பதிப்பகம்; பக் 155-167
- ↑ இனமுழக்கம், 14.10.60, பக்கம் 2
- ↑ தென்னகம்; 4-9-1959; பக்.2
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:13-7-1952, பக்கம் 6
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:15-4-1956, பக்கம் 10
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:6-7-1952, பக்கம் 12
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:22-12-1952, பக்கம் 2
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:9-9-1951, பக்கம் 5
- ↑ 13.0 13.1 13.2 13.3 திராவிடநாடு (இதழ்) நாள்:19-8-1951, பக்கம் 5
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:4-11-1951, பக்கம் 10
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:31-8-1958, பக்கம் 4
- ↑ இனமுழக்கம், 27-1-1961, பக்.6
- ↑ Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-08-22.
வெளி இணைப்பு தொகு