சுகௌலி (Sugauli) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்கு சாம்பாரண் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். நேபாள- பிரித்தானிய இந்தியா நிலப்பிரச்சனைகளை முடிவு கட்ட, இந்நகரத்தில் தான் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நேபாள இராச்சியத்தினர் 1814-இல் சுகௌலி உடன்படிக்கை செய்து கொண்டனர்.

சுகௌலி
பேரூராட்சி
சுகௌலி is located in பீகார்
சுகௌலி
சுகௌலி
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் சுகௌலியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°47′N 84°44′E / 26.783°N 84.733°E / 26.783; 84.733
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்கிழக்கு சாம்பரண்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்38,815
மொழிகள்
 • அலுவல மொழிஇந்தி, போஜ்புரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்845456
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-BR
மக்களவைத் தொகுதிமேற்கு சம்பாரண்
சட்டமன்றத் தொகுதிசுகௌலி
இணையதளம்eastchamparan.bih.nic.in

அரசியல் தொகு

சுகௌலி பேரூரட்சி மேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதிக்கும், சுகௌலி சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 20 வார்டுகளும், 7,480 வீடுகளும் கொண்ட சுகௌலி பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 38,815 ஆகும். அதில் ஆண்கள் 20,584 மற்றும் பெண்கள் 18,231 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7810 (20.12%) ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 935 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 64.90% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 60.14%, இசுலாமியர் 39.59% மற்றவர்கள் 0.37% ஆகவுள்ளனர்.[1]{{[2]

மேற்கோள்கள் தொகு

  1. Sugauli Population Census 2011
  2. "Sugauli Population Census 2011". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 6 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகௌலி&oldid=2976786" இலிருந்து மீள்விக்கப்பட்டது