சுரேந்திரநாத் தாசுகுப்தா

சுரேந்திரநாத் தாசுகுப்தா (Surendranath Dasgupta) (1887 அக்டோபர் 18 - 1952 திசம்பர் 18) இவர் ஓர் சமசுகிருத அறிஞரும், தத்துவவாதியுமாவார்.

சுரேந்திரநாத் தாசுகுப்தா
பிறப்பு1887 அக்டோபர்
குஸ்தியா, நாதியா, வங்காளாம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு18 திசம்பர் 1952 (வயது 65)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விகொல்கத்தா பல்கலைக்கழகம்
படித்த கல்வி நிறுவனங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர்
வாழ்க்கைத்
துணை
இமானி தேவி
பிள்ளைகள்6,

மெய்யியல் பணி
சுரேந்திரநாத் தாசுகுப்தா
முனைவர் பட்ட ஆலோசகர்ஜே.எம். இ. மெக்டாகார்ட்
முனைவர்-பட்ட மாணவர்கள்தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
...

குடும்பமும் கல்வியும் தொகு

சுரேந்திரநாத் 1885 அக்டோபர் 18, ஞாயிற்றுக்கிழமை, வங்காளத்தின் குஸ்தியாவில் (இப்போது வங்காளதேசம் ) ஒரு மருத்துவக் குடும்பத்தில் பிறந்தார். [1] [2] அவரது மூதாதையர் வீடு பரிசால் மாவட்டத்தில் கோய்லா கிராமத்தில் இருந்தது. கொல்கத்தாவில் உள்ள ரிப்பன் கல்லூரியில் படித்த இவர், சமசுகிருதத்தில் கௌரவத்துடன் பட்டம் பெற்றார். பின்னர், 1908 இல், கொல்கத்தாவின் சமசுகிருதக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1910 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மேற்கத்திய தத்துவத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் இந்தியாவின் முன்னோடி திரைப்பட இயக்குனரும், மும்பை டாக்கீஸ் திரைப்பட அரங்கத்தின் நிறுவனருமான இமான்சு ராயின் தங்கை இமானி தேவியை மணந்தார் இவர்களுக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர்: மைத்ரேய் தேவி (1914-1989), சித்ரிதா தேவி - இருவரும் பிரபல எழுத்தாளர்களாக மாறினர் - மற்றும் சுமித்ரா மஜும்தார்; மற்றும் மூன்று மகன்கள், சுபாயு தாசுகுப்தா, சுகதா தாசுகுப்தா மற்றும் பேராசிரியர். சுபாச்சாரி தாசுஸ்குப்தா. இளைய மற்றும் கடைசியாக எஞ்சியிருந்த சுமித்ரா மஜும்தார் செப்டம்பர் 2008 இல் கோவாவில் இறந்தார்.

இவர் 1916 இல் கிரிபித் பரிசையும், 1920 இல் இந்தியத் தத்துவத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். மகாராஜா சர் மனிந்திர சந்திர நந்தி ஐரோப்பாவுக்குச் சென்று ஐரோப்பியத் தத்துவத்தைப் படிக்கும்படி இவரை வற்புறுத்தினார். மேலும் இவரது ஆராய்ச்சி சுற்றுப்பயணத்தின் (1920–22) அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். தாசுகுப்தா இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் டாக்டர் ஜே.எம்.இ மெக்டாகார்ட்டின் கீழ் தத்துவத்தில் ஆராய்ச்சி மாணவராக தன்னை சேர்த்துக் கொண்டார். இந்த நேரத்தில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக அச்சகம் இந்திய தத்துவ வரலாற்றின் (1921) முதல் தொகுதியை வெளியிட்டது. இவர் கேம்பிரிச்சில் விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் பாரிஸில் நடந்த சர்வதேச தத்துவ மாநாட்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த பரிந்துரைக்கப்பட்டார்.

இலண்டனின் அரிஸ்டாட்டிலியன் அமைப்பு, இங்கிலாந்தின் முன்னணி தத்துவ சமுதாயம் மற்றும் கேம்பிரிச்சு, மோரல் அறிவியல் சங்கம் ஆகியவற்றின் விவாதங்களில் இவர் பங்கேற்றது கிட்டத்தட்ட வெல்லமுடியாத சர்ச்சைக்குரியவர் என்ற நற்பெயரைப் பெற்றது. இவர் படித்த வார்டு மற்றும் மெக்டாகார்ட் போன்ற தத்துவத்தின் சிறந்த ஆசிரியர்கள், இவரை அவர்களின் மாணவராக அல்ல, அவர்களுடைய சகாவாகவே பார்த்தார்கள். சமகால ஐரோப்பிய தத்துவம் குறித்த விரிவான ஆய்வறிக்கைக்காக கேம்பிரிச்சுப் முனைவர் பட்டம் பெற்றார்.

குறிப்புகள் தொகு

  1. Drik Panchang Hindu Calendar, Ashwina - Kartika 1942 (October 1885). Accessed 12 November 2020
  2. Surama Dasgupta, “Surendranath Dasgupta: A Memoir”, 19 June 1954, pp. v–xii in A History of Indian Philosophy, Vol. 5: Southern Schools of Śaivism, 1955: Cambridge Univ. Press. Retrieved 12 November 2020

வெளி இணைப்புகள் தொகு