சென்னை அணுமின் நிலையம்

சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station) அல்லது கல்பாக்கம் அணுமின் நிலையம் இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு ஆற்றல் நிலையமாகும். ‎[1] இந்தியாவில் நிலைகொண்டுள்ள இதர அணு ஆற்றல் ஆலைகளைப் போலவே, சென்னை அணுமின் நிலையமும் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அணுமின் கழக நிருவாகத்தின் கீழ் செயல் பட்டு வருகிறது.[2] இத்திட்டத்தின் பணிகள் 1970 ஆம் ஆண்டில் துவங்கின.

சென்னை அணுமின் நிலையம்
சென்னை அணுமின் நிலையம் is located in இந்தியா
சென்னை அணுமின் நிலையம்
அமைவிடம்:சென்னை அணுமின் நிலையம்
நாடுஇந்தியா
அமைவு12°33′30″N 80°10′30″E / 12.55833°N 80.17500°E / 12.55833; 80.17500
அமைப்பு துவங்கிய தேதி1970
இயங்கத் துவங்கிய தேதிசனவரி 24, 1984
இயக்குபவர்இந்திய அணுமின் கழகம்
உலை விவரம்
செயல்படும் உலைகள்2 x 220 MW
கட்டப்பட்டு வரும் உலைகள்1 x 500 MW
மின் உற்பத்தி விவரம்
ஆண்டு உற்பத்தி2,311 GW·h
மொத்த உற்பத்தி37,546 GW·h
இணையதளம்
Nuclear Power Corporation of India
நிலவரம்:சூலை 24, 2007

சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன், இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி, ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்ற பெருமைக்குரிய அணுசக்தியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலையாகும். இந்த ஆலை இந்திய அறிவியல் வல்லுனர்கள் வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளை கொண்டுள்ளது. இவ்வாலையை முழுமையான பாதுகாப்புடன் செயல்படுத்தும் நோக்குடன் இவ்வாலையை சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க அமைத்ததாகும்.

காண்டு வகை உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் கனநீரைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. இவ்வாலையின் உலைகளின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலையை 1983 ஆம் ஆண்டில் தான் செயல் படுத்த இயன்றது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது.

குளிரேற்று முறையில் ஏற்பட்ட சில இடர்பாடுகள் காரணமாக அவற்றில் உள்ள சிர்க்கோனியம் கலந்த கலப்புலோகம் ஒரு எக்கியில் காணப்பட்டதன் விளைவாக, இவ்வுலைகள் முழு திறனில் செயல் படவில்லை.[3]

தோரியம் அணு உலை தொகு

இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணிகளில் இங்குள்ள வல்லுனர்கள் முனைவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த அணு உலைக்கு எரிபொருளாக தோரியம் பயன்படுத்தப்படும். நமது நாட்டின் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா போன்ற மாநிலங்களின் கடற்கரை மணலில் இந்த தோரியம் மோனாசைட் [4]‎ வடிவில் கிடைக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. '^ 'http://www.npcil.nic.in/main/AboutUs.aspx
  2. ‎^ Plants in Operation (Company website)‎
  3. ‎"NTI: Country Overviews: India: Nuclear Facilities Madras Atomic Power Station (MAPS)". Nuclear Threat Initiative. 2003-09. http://www.nti.org/e_research/profiles/India/Nuclear/2103_2460.html பரணிடப்பட்டது 2004-03-17 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2009-11-29
  4. [‎http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6294167.ece%7C கல்பாக்கம் தோரியம் அணு உலை அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்: அமைச்சர் தகவல்]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_அணுமின்_நிலையம்&oldid=3357732" இலிருந்து மீள்விக்கப்பட்டது