செய்யாறு வட்டம்

(செய்யார் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செய்யாறு வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவத்திபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் தேத்துறை, அனக்காவூர், வடதண்டலம், வாக்கடை, செய்யாறு என 5 உள்வட்டங்களும்[2], 131 வருவாய் கிராமங்களும் உள்ளன.[3]

2012-இல் இவ்வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு வெம்பாக்கம் வட்டம் நிறுவப்பட்டது.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,18,876 ஆகும். அதில் 1,08,765 ஆண்களும், 1,10,111 பெண்களும் உள்ளனர் 54655 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் சராசரி எழுத்தறிவு 67.97% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 35,011 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். இந்த வட்டத்தின் மக்கள்தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 25.11% மற்றும் 1.18% ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97%, இசுலாமியர்கள் 2.11%, கிறித்தவர்கள் 0.55% சமணர்கள் 0..16% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யாறு_வட்டம்&oldid=3826868" இலிருந்து மீள்விக்கப்பட்டது