சேக் முஜிபுர் ரகுமானின் படுகொலை

சேக் முஜிபுர் ரகுமானின் படுகொலை (Assassination of Sheikh Mujibur Rahman) என்பது வங்காளதேசத்தின் முதல் குடியரசுத் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் (சேக் முஜிப் அல்லது முஜிப் அல்லது வங்கபந்து என்றும் அழைக்கப்படுகிறார்) மற்றும் அவரது குடும்பத்தினர் 1975 ஆகத்து 15 அதிகாலையில் கொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் வங்கதேச இராணுவ வீரர்களில் ஒரு குழு அவரது வீட்டிற்குள் சென்று படுகொலை செய்தது.

பின்னணி தொகு

முஜிப்புரின் தலைமை தொகு

1970 பாக்கித்தான் பொதுத் தேர்தலில், சேக் முஜிப்பின் கட்சியான அவாமி லீக் (முன்பு அவாமி முஸ்லிம் லீக் என்று அழைக்கப்பட்டது) பாக்கித்தான் தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை பெற்றது. கிழக்கு பாக்கித்தானில் 169 இடங்களில் 167 இடங்களை அவர்கள் வென்றனர். பின்னர் அது மேற்கு பாக்கித்தானில் இருந்து பிரிந்த பின்னர் வங்காளதேசமாக மாறியது. பாக்கித்தானின் இராணுவ அரசாங்கம் அதிகாரத்தை ஒப்படைக்க தாமதப்படுத்திய போதிலும், முஜிப்பின் வீடு மார்ச் மாதத்திற்குள் கிழக்கு பாக்கித்தானில் உண்மையான அரசாங்கத் தலைமயிடமாக மாறியது. 1971 ல் வங்காளதேச விடுதலைப் போரின் தொடக்கத்தில், அவர் தனது வீட்டில் பாக்கித்தான் படையினரால் கைது செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் வங்கதேச கிளர்ச்சியின் தற்காலிக அரசாங்கமான முஜிப்நகர் அரசாங்கம் ஏப்ரல் 10 ஆம் தேதி அமைக்கப்பட்டு முஜீப்பை அதன் தலைவராகவும் வங்காளதேச ஆயுதப்படைகளின் தலைவராகவும் ஆக்கியது. [1] 1971 திசம்பர் 16 அன்று பாக்கித்தான் படைகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சேக் முஜிபுர் ரகுமான் 1971 திசம்பர் 22 அன்று இலண்டனில் பாக்கித்தானின் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்குப் பறந்தார். அதைத் தொடர்ந்து வங்காளதேசம் சென்றார். வங்காளதேசம் சுதந்திரம் பெற்ற மூன்று ஆண்டுகளுக்கு முஜிப் வங்காளதேச பிரதமராக அரசாங்கத்தை வழிநடத்தினார்.

பின்னர் அவர் வங்காளதேசத்தின் குடியர்சுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயாதீன பத்திரிகைகளையும் தடைசெய்து 1975 சூன் 7 அன்று ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கமான வங்காளதேச கிருசக் சராமிக் அவாமி லீக் (பாக்சல்) என்பதை நிறுவினார். வங்காளதேசத்தில் உறுதித்தன்மையைக் கொண்டுவருவதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் நோக்கமாக கொண்டிருருந்தபோதிலும், இந்த அமைப்பு அதிகாரத்துவம், இராணுவம் மற்றும் குடிமைச் சமூகத்தில் விரோதத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும், முஜிப்பின் ஆதரவாளர்களும், முஜிப்பின் சர்வாதிகார, ஒரு கட்சி அரசுக்கு சவால் விடுத்தனர். [2] பாக்சலின் ஒரு தரப்பு ஆட்சியின் காலம் பரவலான தணிக்கை மற்றும் நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் குறிக்கப்பட்டது. அத்துடன் பொது மக்கள், அறிஞர்கள் மற்றும் பிற அனைத்து அரசியல் குழுக்களின் எதிர்ப்பையும் சந்தித்தது. நாடு குழப்பத்தில் இருந்தது: ஊழல் பரவலாக இருந்தது. உணவு பற்றாக்குறை, மோசமான விநியோகம் ஆகியவை ஒரு பேரழிவு பஞ்சத்திற்கு வழிவகுத்தது. தொழிற்துறையின் தேசியமயமாக்கல் எந்தவொரு உறுதியான முன்னேற்றத்தையும் தரவில்லை. அரசாங்கம் பலவீனமாக இருந்தது. தெளிவான குறிக்கோள்கள் இல்லாமல் இருந்தது. இதனால் நாடு கிட்டத்தட்ட திவாலானது. தூர கிழக்கு பொருளாதார மதிப்பாய்வு என்ற பத்திரிகையில் லாரன்ஸ் லிஃப்ஷால்ட்ஸ் 1974 இல் வங்காளதேசத்தில் "ஊழல் மற்றும் முறைகேடுகள் மற்றும் தேசிய செல்வத்தை கொள்ளையடிப்பது முன்னோடியில்லாதது" என்று எழுதினார். [3]

இடதுசாரிக் கிளர்ச்சி தொகு

1972 முதல் 1975 வரை ஒரு இடதுசாரிக் கிளர்ச்சி படுகொலைக்கு வழிவகுத்த நிலைமைகளை உருவாக்குவதற்கு பரவலாக பொறுப்பேற்றது. [4] [5] [6] 1972 ஆம் ஆண்டில், வங்காளதேச அவாமி லீக்கின் மாணவர் பிரிவான வங்காளதேச சத்ரா லீக்கில் ஏற்பட்ட பிளவுகளிலிருந்து ஜாதியா சமாஜந்திரிக் தளம் (ஜே.எஸ்.டி) என்ற இடதுசாரி குழு நிறுவப்பட்டது. [7] ஜே.எஸ்.டி, கர்னல் அபு தாகர் மற்றும் அரசியல்வாதி அசனுல் அக் இனு தலைமையிலான அதன் ஆயுதப் பிரிவு கோனோகினி மூலம், அரசாங்க ஆதரவாளர்கள், அவாமி லீக் உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் அரசியல் படுகொலைகளைத் தொடங்கியது. [8] [9] அவர்களின் பிரச்சாரம் நாட்டில் சட்டம் ஒழுங்கு முறிவுக்கு பங்களித்தது. மேலும் முஜிப் படுகொலைக்கும் வழி வகுத்தது. [10]

இராணுவத்தில் சீற்றம் தொகு

சேக் முஜிப் மீது இராணுவம் ஏற்கனவே அதிருப்தி அடைந்துள்ளதாக அந்தோணி மஸ்கரென்ஹாஸ் என்பவர் தனது பங்களாதேஷ்: எ லெகஸி ஆஃப் பிளட் என்ற புத்தகத்தில் எழுதினார்; எவ்வாறாயினும், இறுதிக் கூக்குரலுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட காரணியை அவர் செல்வாக்கு மிக்கவர் என்று மேற்கோளிட்டுள்ளார்: டோங்கியைச் சேர்ந்த சமகால அவாமி லீக் இளைஞர் தலைவரான மொசம்மல், ஒரு புதுமணத் தம்பதியினரைக் கடத்தி, ஓட்டுநரையும் கணவனையும் கொன்று, மணப்பெண்ணை கடத்திச் சென்று, மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அப்பெண்ணின் இறந்த உடல் தெருவில் விடப்பட்டது. மொசம்மலை மேஜர் நாசர் கைது செய்து போலீசில் ஒப்படைத்தார். ஆனால் போலீசார் அவரை உடனடியாக விடுவித்தனர். அந்த நேரத்தில் சேக் முஜிப்பின் தலையீட்டால் மட்டுமே அவர் அந்தக் குற்றத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று பலர் நினைத்தார்கள். இந்த சம்பவம் இராணுவத்தில் சேக் முஜிப்புக்கு எதிரான அதிருப்தியை அதிகரித்தது. அவரது படுகொலைக்குப் பின்னால் கடைசி நிமிடத்தில் முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. [11]

நிகழ்வுகள் தொகு

படுகொலை தொகு

1975 ஆகத்து 15 னறு அதிகாலையில், சதிகாரர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதல் கவசப் பிரிவின் வங்காள லான்சர்கள் மற்றும் மேஜர் அடாவின் கீழ் 535 வது காலாட்படைப் பிரிவைக் கொண்ட ஒரு குழு, முஜிப்பின் இல்லத்தைத் தாக்கியது. [12] குடியரசுத் தலைவரின் வீட்டைப் பாதுகாக்கும் இராணுவ படைப்பிரிவு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. முஜிப்பின் மகன் சேக் கமல், தரை தளத்தில் உள்ள வரவேற்பு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். [13] இதற்கிடையில், முஜிப் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவருக்கு பரிசீலிக்க நேரம் அனுமதிக்கப்பட்டது. இராணுவ புலனாய்வுத் தலைவரான கர்னல் ஜமீல் உதின் அகமதுவை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஜமீல் உதவிக்கு வந்தபோது அவர் குடியிருப்பு வாசலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசியாக சேக் முஜிப் பதவி விலக மறுத்த பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டார். [14]

தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றவர்கள் முஜிப்பின் மனைவி ஷேக் பாசிலத்துன்னேசா முஜிப், முஜிப்பின் தம்பி ஷேக் நாசர், முஜிப்பின் பல ஊழியர்கள் கொல்லப்பட்டனர்; முஜிப்பின் இரண்டாவது மகனும் இராணுவ அதிகாரியுமான சேக் ஜமால், முஜிப்பின் இளைய மகன் பத்து வயது சேக் ரஸ்ஸல் மற்றும் முஜிப்பின் இரண்டு மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர். [15] [16] [17] [18]

அவாமி லீக்கின் நிறுவனத் தலைவர்களில் 4 பேர், வங்காளதேசத்தின் முதல் பிரதமர் தாஜுதீன் அகமது, முன்னாள் பிரதமர் மன்சூர் அலி, முன்னாள் துணைத் தலைவர் சையத் நஸ்ருல் இஸ்லாம், முன்னாள் உள்துறை அமைச்சர் ஏ.எச். எம். கமாருஸ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 3, 1975 அன்று, டாக்கா மத்திய சிறையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். [19]

படுகொலைக்குப் பின்னர் தொகு

கோண்டக்கர் முஸ்டாக் அகமது என்பவர் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் சியாவர் ரகுமான் புதிய இராணுவத் தளபதியாக ஆனார். முன்னணி சதிகாரர்கள் அனைவருக்கும் உயர் அரசு பதவிகள் வழங்கப்பட்டன. நவம்பர் 3, 1975 இல் பிரிகேடியர் ஜெனரல் கலீத் முசராப் தலைமையிலான மற்றொரு சதித்திட்டத்தால் அவர்கள் அனைவரும் பின்னர் கவிழ்க்கப்பட்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 7 ம் தேதி நடந்த ஒரு கிளர்ச்சியின் போது முசராப் கொல்லப்பட்டார். இது மேஜர் ஜெனரல் சியாவுர் ரகுமானை ஆட்சியில் இருந்து விடுவித்து சட்டம் ஒழுங்கைக் கொண்டுவர அழைத்து வரப்பட்டது.

மேஜர் சையத் பாரூக் ரகுமான், ரசீத் மற்றும் பிற ராணுவ அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டனர் . ஆயினும்கூட, அவர்கள் லிபியா, சீனா, ரோடீசியா, கனடா மற்றும் பிற நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கு வெளிநாடுகளில் வங்காளதேசப் பணிகளில் பல இராஜதந்திர பதவிகள் வழங்கப்பட்டன. லெப்டினன்ட் கேணல் (ஓய்வு ) சையத் பாரூக் ரகுமான் பின்னர் திரும்பி வந்து 1985 ல் பங்களாதேஷ் சுதந்திரக் கட்சியை நிறுவி 1987 ல் குடியரசுத்தலைவர் தேர்தலில் இராணுவ ஆட்சியாளர் லெப்டினன்ட் ஜெனரல் உசேன் முகமது எர்சாத்துக்கு எதிராக பங்கேற்றார். ஆனால் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

முஜிப்பின் இரண்டு மகள்கள் சேக் அசீனா மற்றும் சேக் ரகானா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் மேற்கு ஜெர்மனியில் இருந்தனர். [20] ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அவர்கள் வங்காளதேசத்துக்குப் பதிலாக மீண்டும் இந்தியாவுக்குச் சென்று இந்திய அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்தனர். சேக் அசீனா புது தில்லியில் 1981 மே 17 அன்று வங்காளதேசத்துக்குத் திரும்புவதற்கு முன் சுயமாக நாடுகடத்தப்பட்டார். [21]

குறிப்புகள் தொகு

  1. Harun-or-Rashid (2012). "Rahman, Bangabandhu Sheikh Mujibur". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Rahman,_Bangabandhu_Sheikh_Mujibur. 
  2. Islam, Sirajul (2012). "Bangladesh Krishak Sramik Awami League". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Bangladesh_Krishak_Sramik_Awami_League. 
  3. Datta-Ray, Sunanda K.. "Tread Warily to the Dream". 
  4. "Awami League will have to atone for making a JaSoD leader minister, says Syed Ashraf". bdnews24.com. 13 June 2016. http://bdnews24.com/politics/2016/06/13/awami-league-will-have-to-atone-for-making-a-jasod-leader-minister-says-syed-ashraf. பார்த்த நாள்: 11 July 2016. 
  5. "Clarify your role in Bangabandhu killing, BNP to Inu". Prothom Alo. 24 August 2015 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161012181457/http://en.prothom-alo.com/bangladesh/news/76721/No-lecture-on-democracy-please-BNP-to-Inu. பார்த்த நாள்: 11 July 2016. 
  6. "No law of 'illegitimate govt' will last, says Khaleda". bdnews24.com. 25 August 2015. http://bdnews24.com/politics/2014/08/25/no-law-of-illegitimate-govt-will-last-says-khaleda. பார்த்த நாள்: 11 July 2016. 
  7. "Hasanul Haq Inu's JaSoD splits as he names Shirin general secretary". bdnews24.com. 13 March 2016. http://bdnews24.com/politics/2016/03/12/hasanul-haq-inus-jasod-splits-as-he-names-shirin-general-secretary. பார்த்த நாள்: 11 July 2016. 
  8. "JS sees debate over role of Gono Bahini". The Daily Star. http://www.thedailystar.net/js-sees-debate-over-role-of-gono-bahini-31691. பார்த்த நாள்: 9 July 2015. 
  9. "Inu, Khairul to be tried in people's court: BNP". The News Today. 15 June 2016 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160818104302/http://www.newstoday.com.bd/index.php?option=details&news_id=2434364&date=2016-02-03. பார்த்த நாள்: 11 July 2016. 
  10. "JSD, NAP, left parties also behind the killing of Bangabandhu". The New Nation. 26 August 2015. http://thedailynewnation.com/news/64702/jsd-nap-left-parties-also-behind-the-killing-of-bangabandhu.html. பார்த்த நாள்: 13 July 2016. 
  11. Mascarenhas, Anthony. Bangladesh: A Legacy of Blood. Hodder and Stoughton. 
  12. Dasgupta 1978: "According to foreign journalists, the operation started at 12.30 A.M. ... divided into four groups. The first group rolled towards Mujib's residence ... The first group was formed with selected soldiers from the Bengal Lancers of the First Armoured Division and 535 Infantry Regiment. It was put under Major Huda. "
  13. Dasgupta 1978: "[soldiers] quickly surrounded Mujib's residence. A couple of rounds were fired. No resistance came from the army platoon guarding the President's house ... The first round of fire had brought Sheikh Kamal hurrying down to the reception on the ground floor ... A short burst, and his body, riddled with bullets sank to the floor."
  14. Dasgupta 1978: "Reports reveal that they did not kill Sheikh Mujib at once. Mujib was asked to step down from power and he was given some time to decide. Mujib summoned Colonel Jamil, the new chief of the Military Intelligence over the phone. Colonel Jamil arrived fast and ordered the army to return to the barracks ... Then a rapid burst from machine guns mowed down Jamil right in front of the gate."
  15. Dasgupta 1978: "The murderers rushed upstairs ... they came across Begum Lutfunnessa Mujib ... Shots rang out again. Begum Mujib lay on the floor, dead ... A group searched the ground floor. In the lavatories, they found Sheikh Nasser and a couple of servants and gunned them down. The other group charged into Mujib's bedroom. There they found the two daughters-in-law of Mujib along with Sheikh Jamal and Sheikh Russel ... they, too, were not spared by these butchers."
  16. Dasgupta 1978: "Lieutenant Moalemuddin sped for the residence of Sheikh Mani with three trucks full of soldiers ... while Major Shahriar and Captain Huda went out with some soldiers to get rid of Minister Abdur Rab Sarniabat."
  17. Dasgupta 1978: "At the same time at 13/1 Dhanmandi Sheikh Fazlul Haq and his pregnant wife, and on Mineta Road, Abdur Rab Sarniabat with the 13 members of his family, were butchered ..."
  18. Dasgupta 1978: "[The] fourth group, the most powerful of the lot, proceeded towards Savar, near Dacca, to repel the anticipated counter-attack by the Security Forces. It did run against some resistance at Savar. But once the shelling took toll of eleven people, the leaderless Security Force surrendered"
  19. Dasgupta 1978: "3 November ... Khondakar also knew that the situation was bound to be grave once Nazrul Islam, Tajuddin Ahmed, Kamaruzzaman and Mansur Ali were released ... Khondakar had had them arrested under various pretexts shortly after Mujib's assassination, and they were still rotting in Dacca Jail. So, Khondakar ... managed to allow the associates of the "killers" [the seven Majors who assassinated Sheikh Mujibur Rahman] inside the jail to brutally kill these four leaders."
  20. "Bangladeshi PM Sheikh Hasina requests extradition of Bangabandhu killers from US". Business Standard. 30 August 2016. http://www.business-standard.com/article/international/bangladeshi-pm-sheikh-hasina-requests-extradition-of-bangabandhu-killers-from-us-116083000733_1.html. பார்த்த நாள்: 2 January 2017. 
  21. Banglapedia: National Encyclopedia of Bangladesh. 

மேற்குறிப்புகள் தொகு