ஜோகேஸ்வரி குகைகள்


ஜோகேஸ்வரி குகைகள் (Jogeshwari Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், மும்பை புறநகர் மாவட்டத்தில் மற்றும் பெருநகரமும்பை மாநகராட்சியின் கிழக்கில் ஜோகேஸ்வரி எனுமிடத்தில் அமைந்த பௌத்தக் குடைவரைகள் ஆகும். இக்குடைவரை மூன்று நுழைவு வாயில் கொண்டது கிபி 520 - 550 ஆண்டுகளில் வடிக்கப்பட்ட மகாயான பௌத்தப் பிரிவைச் சார்ந்த இக்குடைவரைகளில் தற்போது இந்து சமயக் கடவுள்களின் இருப்பிடமாக திகழ்கிறது. இக்குகையின் உட்புறத்தில் ஜோகேஸ்வரி மாதாவின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

ஜோகேஸ்வரி குகையின் உட்புறத்தோற்றம், ஜோகேஸ்வரி, மும்பை புறநகரம், மகாராட்டிரா
ஜோகேஸ்வரி குகையின் நுழைவாயில்

மேலும் இக்குகைகளைச் சுற்றிலும் தற்போது மக்கள்தொகை பெருகிவிட்டதால், இக்குகைகளை கழிவிடங்களாகவும், சமூகவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். [1]

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Patel, Samir. "The Slum and the Sacred Cave" (PDF). Archaeology May/June 2007. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.
பொது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகேஸ்வரி_குகைகள்&oldid=3539153" இலிருந்து மீள்விக்கப்பட்டது