டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் உள்ள சட்டக் கல்லூரி

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை (Dr. Ambedkar Government Law College, Chennai) இந்தியாவின், சென்னை மாவட்டத்தில் இயங்கும் ஓர் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. முதலில் மெட்ராஸ் சட்டக் கல்லூரி எனப் பெயரில் இயங்கிய இக்கல்லூரியானது, இந்திய சுதந்திரப் போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை (DAGLC) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி
குறிக்கோளுரைFiat justitia ruat caelum
("Let justice be done though the heavens fall.")
வகைஅரசு சட்டக் கல்லூரி
உருவாக்கம்1891
Parent institution
1891-1996: சென்னை பல்கலைக்கழகம் 1996-முதல்: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
மாணவர்கள்562
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்AGLC
இணையதளம்http://www.draglc.ac.in/

இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.[1]

வரலாறு தொகு

 
மெட்ராஸ் சட்டக் கல்லூரி, 1905

இக்கல்லூரியானது திரு. ஜார்ஜ் நியூட்டன் என்பவருடைய யோசனையால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் சென்னைக்கென தனியாக ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என யோசனை கூறினார். மேலும் அப்போது சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியரால் தான் சட்ட கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.

பழைய மாணவர்களில் முக்கியமானவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. விரும்பத்தகாத சாதீய மற்றும்அரசியல் நிகழ்வுகள்
  2. "இந்திய நாடாளுமன்றம் உறுப்பினர்களின் தன்குறிப்பு". Archived from the original on 2011-07-29. பார்க்கப்பட்ட நாள் 2009-06-05.