டி. வி. இராமசுப்பையர்

டி.வி.இராமசுப்பையர் (அக்டோபர் 2, 1908ஜூலை 21, 1984) தினமலர் நாளிதழின் நிறுவனர். பொதுவாக டி.வி.ஆர் என அறியப்படும் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

வாழ்க்கை குறிப்பு தொகு

தேதி நிகழ்வு
02.10.1908 பிறப்பு. பெற்றோர் - இராமலிங்க ஐயர், பகவதி
1915 வேங்கடபதி ஐயர், ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு தத்து கொடுக்க பட்டார்
1919 திருமணம். மனைவி - கிருஷ்ணம்மாள்
06.09.1951 தினமலர் நாளிதழ் திருவனந்தபுரத்தில் தொடக்கம்
20.10.1954 தினமலர் குமரி மாவட்ட போராட்டத்திற்கு தமிழர்களின் குரலாக ஒலித்தது என்ற குற்றச்சாட்டின் மேல் திருவனந்தபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி சங்கரன் முன்னிலையில் டி.வி.ஆர் ஒரு நாள் முழுவதும் விசாரிக்கப்பட்டார்
3.11.1956 குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த வெற்றி விழா டி.வி.ஆர் தலைமையில் நடந்தது
16.04.1957 திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு மாறியது தினமலர் பதிப்பு
21.07.1984 டி.வி.ஆர் மறைவு

[1]

தகவல் மூலம் தொகு

  1. கடல் தாமரை (புத்தகம்) - தி.முத்துகிருஷ்ணன். முதல் வெளியீடு - 1996. வெளியீடு - தினமலர், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._இராமசுப்பையர்&oldid=2816397" இலிருந்து மீள்விக்கப்பட்டது