டெ'ஆலம்பர்ட் முரண்பாடு

பாய்ம இயக்கவியலில், டெ'ஆலம்பர்ட் முரண்பாடு (D'Alembert's paradox) என்பது 1752-ஆம் ஆண்டில் பிரெஞ்சு கணிதவியலாளரான ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்[1] என்பவரால் கணிக்கப்பட்ட முரண் ஆகும். அமுக்கவியலாத மற்றும் பிசுக்குமையற்ற நிலைப்பண்புப் பாய்ம ஓட்டத்தில், பாய்மத்தைச் சார்ந்து நிலையான திசைவேகத்தில் செல்லும் பொருள்மீதான இழுவை விசை சுழியம் (பூச்சியம்) என்று டெ'ஆலம்பர்ட் நிரூபணம் செய்தார்.[2] பூச்சிய இழுவை என்ற முடிவானது, இயல்பில் காணக்கூடிய நிலைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது; காற்று மற்றும் நீர் போன்ற பாய்மங்களில் குறிப்பிட்ட திசைவேகத்தில் செல்லும் பொருட்களின் மீது, முக்கியமாக அதிக ரேய்னால்ட்ஸ் எண் ஓட்டங்களில், கணிசமான அளவு இழுவை விசை செயல்பட்டது இயல்பாக உணரப்பட்டது எனினும் கணிதச் சமன்பாடுகள் மூலம் தருவிக்கப்பட்ட முடிவு வேறுபட்டதாகவிருந்தது.

ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்(1717-1783)

உசாத்துணைகள் தொகு

  1. Jean le Rond d'Alembert (1752).
  2. Grimberg, Pauls & Frisch (2008).
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெ%27ஆலம்பர்ட்_முரண்பாடு&oldid=2747683" இலிருந்து மீள்விக்கப்பட்டது