தக்காக்கி கஜித்தா

தக்காக்கி கஜித்தா (Takaaki Kajita, 梶田隆章, கஜித்தா தக்காக்கி, பிறப்பு: 1959) சப்பானிய இயற்பியலாளர் ஆவார். இவர் நியூத்திரினோ (நுண்நொதுமி) ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக அறியப்படுகிறார். நியூத்திரினோக்கள் ஒரு திணிவைக் கொண்டுள்ளதைக் காட்டும் நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், கனடாவைச் சேர்ந்த ஆர்தர் பி. மெக்டொனால்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தக்காக்கி கஜித்தா
梶田 隆章 Edit on Wikidata
பிறப்பு9 மார்ச்சு 1959 (அகவை 64)
ஹிகாஷிமட்சுயமா
படிப்புமுனைவர், Doctor of Science
படித்த இடங்கள்Saitama University, டோக்கியோ பல்கலைக்கழகம், Kawagoe Kōtō Gakkō
பணிபல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு, Nishina Memorial Prize, Order of Culture, Person of Cultural Merit, Panofsky Prize
இணையம்http://www.ipmu.jp/takaaki-kajita
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்இயற்பியல்
நிறுவனங்கள்
ஆய்வு நெறியாளர்Masatoshi Koshiba

பணி தொகு

கஜித்தா சைத்தாமா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று (1981) பின்னர் தனது முனைவர் பட்டத்தை டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் பெற்றுக் கொண்டார். 1988 முதல் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் காஸ்மிக் கதிர்வீச்சு ஆய்வுக்கான கல்விக்கழகத்தில் பணியாற்றுகிறார். 1999 ஆம் ஆண்டு முதல் அங்கு பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காக்கி_கஜித்தா&oldid=2734293" இலிருந்து மீள்விக்கப்பட்டது