தக்காணப் பஞ்சம்

தக்காணப் பஞ்சம் (Deccan Famine) என்பது கிபி 1630 முதல் 1632 வரையான காலப்பகுதியில் இந்தியாவின் நடுப் பகுதியில் தக்காணப் பீடபூமியில் நிலவிய கடும் பஞ்சத்தைக் குறிக்கும். 1632 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 2,000,000 இந்தியர்கள் உயிரிழந்தனர். அடுத்தடுத்து மூன்று தடவைகள் முக்கிய பயிர் விளைச்சல்கள் தடைப்பட்டமையினால் இப்பகுதியில் கடும் பஞ்சம், தொற்று நோய்கள், மற்றும் இடப்பெயர்வு ஆகியன நிலவின. இந்திய வரலாற்றில் மிகக் கடுமையான பஞ்சமாக இது இருந்தது.

மூலம் தொகு

Ó Gráda, Cormac. (2007). "Making Famine History." Journal of Economic Literature. Vol. XLV (March 2007), pp. 5–38.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காணப்_பஞ்சம்&oldid=2692856" இலிருந்து மீள்விக்கப்பட்டது