தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி

பெரம்பலூர் மாவட்டக் கல்விநிலையம், தமிழ் நாடு

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.இது 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் பல்வேறு படிப்புகள் வழங்குகிறது.

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி - எளம்பலூர்
உருவாக்கம்1985
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.roevercollege.ac.in

தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயின்ட் ஜான் சங்கம் அறக்கட்டளையின் ஒரு கல்வி நிறுவனமாகும். சிறுபான்மை கல்வி நிறுவனமாக 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, ஜெர்மனியரான ஹேன்ஸ் ரோவர், சமுதாயத்தில் பலவீனமான மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு குறிப்பாக கிறிஸ்துவ சிறுபான்மையினர் ஆகியோருக்கு கல்வி சொல்லி கொடுப்பதற்காக இந்நிறுவனத்தினை ஆரம்பித்தார்.[1]. பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வினால் அங்கீகரிக்கப்பட்டது.

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • பயோடெக்னாலஜி
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகம் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வர்த்தகம்


ஆதாரங்கள் தொகு

  1. http://www.roevercollege.ac.in/ கல்லூரி இணையதளம்