திக்நாகர் (Dignāga) அல்லது திண்ணாகர் (Diṅnāga) யோகாசாரம் எனும் பௌத்த சமயப் பிரிவை முன்மொழிந்த பௌத்த அறிஞர். திண்ணாகர் கி.பி 480 முதல் 540 வரை வாழ்ந்ததாக கருதப்படுபவர். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் குறைவே. பௌத்த தர்க்கவியலை[1] வடிவமைத்த முன்னோடி என்று அறியப்படும் திண்ணாகர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் இருந்த சிம்மவாக்தம் எனும் கிராமத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.[2] நாகதத்தர் என்ற பௌத்த குருவிடம் சீடராக இருந்து பின்னர் வசுபந்து எனும் பௌத்த குருவிடம் பௌத்த இயலை கற்றவர். இவரது தர்க்கவியல் நூல்களுக்கு தர்மகீர்த்தி பௌத்த அறிஞர் விளக்க உரைகள் எழுதியுள்ளார்.

திக்நாகர்

எழுதிய நூல்கள் தொகு

  • திண்ணாகரின் முதன்மையான தருக்க நூல் பிரமாண-சமுச்சயம் (Compendium of Valid Cognition), (Apoha).[3]
  • ஏது சக்கரம் (நிகழ்ச்சித் திகிரி), இந்நூல் முறையான பௌத்த தர்க்கவியலை விளக்கும் முதல் நூல்.
  • ஆலம்பன-பரிக்சா, (The Treatise on the Objects of Cognition)
  • அபிதர்மகோச-மர்ம-பிரதீபவசுபந்துவின் அபிதர்மகோச உரை
  • திரிகால-பரிக்சா, (Treatise on the tri-temporality)
  • நியாய-முக்தா (Introduction to logic).

மேற்கோள்கள் தொகு

  1. Zheng Wei-hong; Dignāga and Dharmakīrti: Two Summits of Indian Buddhist Logic. Research Institute of Chinese Classics; Fudan University; Shanghai, China
  2. Karr, Andy (2007). Contemplating Reality: A Practitioner's Guide to the View in Indo-Tibetan Buddhism. Shambhala Publications. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781590304297. http://books.google.co.uk/books?id=qTd_fbuERdEC. 
  3. Arnold, Dan. The Philosophical Works and Influence of Dignāga and Dharmakīrti, http://www.oxfordbibliographies.com/view/document/obo-9780195393521/obo-9780195393521-0085.xml

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்ணாகர்&oldid=2712220" இலிருந்து மீள்விக்கப்பட்டது