திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்

திருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பள்ளியின் முக்கூடல்
பெயர்:திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பள்ளி முக்கூடல்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:முக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்
தாயார்:அஞ்சனாட்சியம்மை, மைம்மேவு கண்ணி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:முக்கூடல் தீர்த்தம்(கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக ஐதீகம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

அமைவிடம் தொகு

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

சிறப்புகள் தொகு

 
மூலவர் விமானம்

ஜடாயு பேறு பெற்ற திருத்தலம். எனவே குருவி ராமேசுவரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள், தபோவதனி என்ற அரசியாரின் குழந்தையாகத் தோன்றி வளர, சிவபெருமான் வேதியராக வந்து திருமணம் புரிந்த திருத்தலமாகும்.[1] இத்தலத்தில் மூர்க்க மகரிஷி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள் தொகு

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 228,229

வெளி இணைப்புகள் தொகு

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க தொகு