திருமுல்லைவாசல்

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 'திருமுல்லைவாயல்' என்று அழைக்கப்படும் ஓர் ஊர்

திருமுல்லைவாசல் அல்லது திருமுல்லைவாயல் (Thirumullaivoyal) தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின், ஆவடி வட்டத்தில் அமைந்துள்ள 5 உள்வட்டங்களில் ஒன்றாகும். மேலும் திருமுல்லைவாசல் ஆவடி நகராட்சியில் உள்ளது.[1] இது பெருநகர சென்னை மாநகராட்சி வலாயத்தில் உள்ளது. சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில், திருமுல்லைவாசல் தொடருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.

திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் கோயில்
திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் கோயில்
திருமுல்லைவாசல் is located in சென்னை
திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல் is located in தமிழ் நாடு
திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல் is located in இந்தியா
திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல்
ஆள்கூறுகள்: 13°07′55″N 80°07′51″E / 13.13183°N 80.13082°E / 13.13183; 80.13082
Countryஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600 062
வாகனப் பதிவுTN-13

அமைவிடம் தொகு

பெருநகர சென்னை மாநகராட்சியின் வலாயத்தில் திருமுல்லைவாசல் விரைவாக வளரும் நகரப் பகுதியாக மாறிவருகிறது. மேற்கு சென்னையின் ஒரு பகுதியாக உள்ள திருமுல்லைவாசலுக்கு தென்கிழக்கில் 2 கிமீ தொலைவில் அம்பத்தூர் நகராட்சியும், தென்மேற்கில் ஆவடி நகராட்சியும் உள்ளது.

போக்குவரத்து தொகு

சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 16 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை - அரக்கோணம் வழியாகச் செல்லும் சென்னை புறநகர் இருப்புவழிகள், திருமுல்லைவாசல் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுல்லைவாசல்&oldid=3613657" இலிருந்து மீள்விக்கப்பட்டது