தீயாட்டம்

கேரளாவின் ஒரு பாரம்பரிய நடன வடிவம்

தீயாட்டம் (Theeyaattam) தீயாட்டு என்றும் அழைக்கப்படும் இது கேரளாவின் ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும். தீயாட்டத்தில் இரண்டு வகைகள் இருந்தன - பத்ரகாளி தீயாட்டு மற்றும் அயப்பன் தீயாட்டு ஆகியன. பத்ரகாளி தீயாட்டு தீயாட்டுன்னிகள் என்பவர்கள் (கேரளாவில் ஒரு பிராமண சமூகம்) நிகழ்த்தினர். அய்யப்பன் தீயாட்டத்தை தீயாடி நம்பியார்கள் (அம்பலவசி) நிகழ்த்துகிறார்கள்.

ஒரு தீயாட்டு நிகழ்த்துனர்

பத்ரகாளி தீயாட்டு தொகு

பத்ரகாளி தீயாட்டு என்பது பொதுவாக பத்ரகாளி கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒரு சடங்கு நடனமாகும். பெரும்பாலும் தென்-மத்திய கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இது நிகழ்த்தப்படுகிறது. கோட்டயத்தில் உள்ள பள்ளிப்புரத்து காவு (கொட்டரத்தில் சங்குன்னியின் குடும்பக் கோயில்) திரிக்காரியூர் மகாதேவர் கோயில், பனச்சிமங்கலத்து பத்ரகாளி கோயில் (பனச்சிமங்கலத்து இல்லத்தின் குடும்பக் கோயில்) கொத்தமங்கத்திற்கு அருகில், தொடுப்புழா அருகேயுள்ள மடக்கத்தானம் என்ற ஊரிலுள்ள வனர்காவு, திருவல்லாவுக்கு அருகிலுள்ள புத்துக்குளங்கரை தேவி சேத்ரம் போன்ற கோயில்களின் ஆண்டு விழாக்களில் தீயாட்டு நிகழ்த்தப்படும் சில இடங்கள் ஆகும். இது கோவில்கள் மற்றும் வீடுகளில் வேண்டுதலாகவும் நிகழ்த்தப்படுகிறது. பத்ரகாளி தீயாட்டு நடனம் தாரிகாசுரனுடனான பத்ரகாளியின் போரை சித்தரிக்கிறது. அங்கு இறுதியாக பத்ரகாளி வெற்றியாளராக வெளிப்படுகிறார்.

அய்யப்பன் தீயாட்டு தொகு

அய்யப்பன் தீயாட்டு தீயாடி நம்பியார் சமூகத்தால் நிகழ்த்தப்பட்ட ஒரு கோயில் கலையாகும். இது மூன்று மத்திய கேரள மாவட்டங்களான திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புறம் ஆகிய இடங்களில் வாழும் ஒரு சிறிய அம்பலவாசி சமூகம் நிகழ்த்துகின்றன. [1] விஷ்ணுவின் மோகினி அவதாரத்தில் சிவனுக்குப் ஐயப்பன் பிறந்தார் என்ற புராணக் கதையைச் சுற்றி முழு ஆண் கலை மையமாக உள்ளது.

தீயாட்டியின் நம்பியார் குடும்பங்கள் பெரும்பாலும் மத்திய கேரளாவில் காணப்பட்டாலும், அவர்களின் கலை வடிவமான ஐயப்பன் தீயாட்டம் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமானது. 18 ஆம் நூற்றாண்டின் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் சர்ச்சைக்குரிய கோயில் அழிப்பு நிகழ்வின் போது சமூகம் தங்கள் அசல் வடக்கு மலபார் பகுதிகளிலிருந்து தெற்கே தப்பி சென்றிருக்கலாம் என்பதை சில அறிஞர்கள் / வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். முல்லாங்கிணத்துக்காவு தீயாடி இராமன் நம்பியாரின்,[2] ஐயப்பன் தீயாட்டு என்ற புத்தகம்[3] மேலும் இந்த பழமையான கலை வடிவத்தின் விலைமதிப்பற்ற விளக்கங்களை வழங்கிய வி.ஆர்.பிரபோதனச்சந்திரன் நாயரை நினைவு கூர்ந்தார்.

தீயாட்டுவின் மிகவும் பொதுவான பாங்கானது நான்கு கட்டங்களை உள்ளடக்கியது: அ) கலமெழுத்து (இயற்கையான நிறமிகளைப் பயன்படுத்தி ஐயப்பனின் படத்தை முகத்தில் வரைதல்), ஆ) கொட்டும் பாட்டும் (அயப்பனை அழைக்கும் பாடல்கள் மற்றும் அவர் பிறந்த கதை), இ) சைகைக் கூத்து மூலம் அயப்பனின் பிறப்பைப் பற்றிய ஆடம்பரமான நடனத்தை கட்டியெழுப்புதல்), ஈ) வெளிச்சப்பாடு என்பதாகும். ஐயப்பனின் படம் நிறைவடைய ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆகும். அதன் பிறகு மீதமுள்ள மூன்று சடங்குகளும் கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களை எடுத்துக்கொள்ளும்.

ஐயப்பனின் படம் வரைய வெள்ளை நிறத்திற்கு அரிசி மாவு, மஞ்சள் நிறத்திற்கு மஞ்சள் தூள், பச்சை நிறத்திற்கு வாகை அல்லது மஞ்சாடி இலைகள், சிவப்பு நிறத்திற்கு மஞ்சள் தூள் மற்றும் சுண்ணாம்பு மற்றும் கருப்பு நிறத்திற்கு கருகிய உமி பயன்படுத்தப்படுகிறது. இறைவனின் ஆயுதங்களான வாள் மற்றும் வில்-அம்பு போன்றவற்றையும் வைத்திருப்பார்கள். மேலும் சில நிகழ்ச்சிகளில் புலி அல்லது குதிரையின் மீது பொருத்தப்பட்டும் நிகழ்த்தப்படும்.

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-31.
  2. ayyappantheeyattu.com/mulankunnathukavu_thiyyadi.html
  3. Pradeep, K. (24 October 2013). "Celebrating the art of Ayyappan Theeyyattu". The Hindu. http://www.thehindu.com/books/books...the...ayyappan.../article5267634.ece. 

வெளி இணைப்புகள் தொகு

watch bhadrakali theeyattu on YouTube.

watch bhadrakali theeyattu on googlevideo

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயாட்டம்&oldid=3587229" இலிருந்து மீள்விக்கப்பட்டது