தேசிய இளைஞர் தினம் (இந்தியா)

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தேசிய நாள்
கடைபிடிப்போர் இந்தியா
முக்கியத்துவம்விவேகானந்தர் பிறந்த நாள்
தொடக்கம்1984[1]
நாள்சனவரி 12
நிகழ்வுஆண்டுதோறும்

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

வரலாறு தொகு

ஆங்கில நாட்காட்டியின்படி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12-ம் திகதியை தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984-ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மை மிக்கவராக காணப்பட்டார். மேற்கூறிய அனைத்தும் இந்திய தகவல் தொடர்புகள் வலைப்பதிவு மூலம் அறியப்பட்டவையாகும்.[2]

2013-ஆம் ஆண்டு சனவரி 12-ம் திகதி, சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப்பிறந்தநாள் விழாவை, இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.[3]

இவையையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. http://www.odisha.gov.in/portal/LIWPL/event_archive/Events_Archives/32National_Youth_Day.pdf
  2. "Celebration of National Youth Day - INDIA|வலை காணல்: சனவரி|12|2016|". Archived from the original on 2014-01-21. பார்க்கப்பட்ட நாள் 2016-01-12.
  3. PM's address at the Inauguration of four Year Long Celebrations of Swami Vivekananda's 150th Birth Anniversary|National Informatics Centre.|Last updated on 26-05-2014|வலை காணல்: சனவரி|12|2016|

புற இணைப்புகள் தொகு