தேசிய நெடுஞ்சாலை 209 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 209 தென்னிந்தியாவிலுள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கர்நாடகத்தின் பெங்களூரு நகரின் பசவனகுடியிலுள்ள திவான் மாதவ் ராவ் சாலையில் துவங்கி தமிழ்நாட்டின் திண்டுக்கல்லுக்கு வடக்கே வேடசந்தூரில் தே.நெ.7இல் இணைகிறது. இந்தச் சாலை காவிரி ஆற்றை மாலவல்லிக்கும் சட்டேகாலுக்கும் இடையே கடக்கிறது. இந்தச் சாலை கோயம்புத்தூருக்கும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்திற்கும் இடையே சத்தி சாலை எனப்படுகிறது. இது கோவை மாவட்டத்திலுள்ள முதன்மையான சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 209
209

தேசிய நெடுஞ்சாலை 209
வழித்தட தகவல்கள்
நீளம்:456 km (283 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பெங்களூரு, கர்நாடகம்
To:வேடசந்தூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:கர்நாடகம்: 170 கிமீ
தமிழ்நாடு: 286 கிமீ
முதன்மை
இலக்குகள்:
கொள்ளேகால் - சாமராஜநகர் - பண்ணாரி - சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 208 தே.நெ. 210

வழித்தடம் தொகு

தமிழ்நாடு தொகு

அசனூர், பண்ணாரி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர்(கோவையின் புறநகர்), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் (கோவை மாவட்ட எல்லை), பழனி மற்றும் திண்டுக்கல்.

கர்நாடகம் தொகு

புஞ்சனூர், சாமராஜநகர், யெலந்தூர், கொள்ளேகால், சட்டேகால், மாலவல்லி, அல்கூர், கனகப்புரா, அரோஹல்லி, கக்ளிப்பூர், பெங்களூரு

காட்சிக்கூடம் தொகு

சான்றுகோள்கள் தொகு

  1. Google maps