தொரப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

தொரப்பள்ளி ( Thorapalli ) அல்லது தொரப்பள்ளி அக்ரகாரம் என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]. இவ்வூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் ஒசூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒசூர்- கிருட்டிணகிரி சாலைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.

தொரப்பள்ளி
தொரப்பள்ளி அக்ரகாரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,715
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635109
தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த இல்லம்
தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த இல்லத்தில் உள்ள கல்வெட்டு
தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த இல்லத்தின் முற்றத்தில் அவருக்கு அமைக்கபட்ட சிலை

மக்கள் வகைப்பாடு தொகு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 2177 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 9849, இதில் 4669 பேர் ஆண்கள், 5180 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 72.16% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]

ஊரின் சிறப்பு தொகு

இந்த ஊரில்தான் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி பிறந்தார். அவர் பிறந்த வீட்டை நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரித்து வருகிறது.

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
  2. http://www.census2011.co.in/data/village/643794-thorapalli-agraharam-tamil-nadu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொரப்பள்ளி&oldid=3597785" இலிருந்து மீள்விக்கப்பட்டது